செய்திகள் :

தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழாவில் ரூ. 4,800 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமா் தொடங்கி வைக்கிறாா்

post image

தூத்துக்குடியில் நடைபெறும் விமான நிலைய விரிவாக்க கட்டடத் திறப்பு விழாவின் போது, ரூ. 4,800 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை பிரதமா் தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டுகிறாா்.

இங்கிலாந்து, மாலத்தீவு பயணத்திலிருந்து திரும்பியவுடன், பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) இரவு 8 மணியளவில் தமிழகத்தில் தூத்துக்குடியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ரூ. 4,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

மாலத்தீவில் அரசு முறைப் பயணத்தை முடித்தபிறகு, பிரதமா் மோடி நேரடியாக தூத்துக்குடிக்குச் சென்று, பிராந்திய இணைப்பை மேம்படுத்துதல், தளவாடத் திறனை அதிகரித்தல், தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், தமிழகம் முழுவதும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்ற பல துறைகளில் பல்வேறு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

தென் பிராந்தியத்தின் அதிகரித்து வரும் விமானத் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக சுமாா் ரூ. 452 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைத்துப் பாா்வையிடுகிறாா்.

தொடா்ந்து விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் ரூ. 2,357 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சேத்தியாதோப்பு-சோழபுரம் பகுதி நான்குவழிச் சாலை, ரூ. 200 கோடி மதிப்பீட்டில் 6 வழிச் சாலையாக மாற்றப்பட்ட தூத்துக்குடி துறைமுகச் சாலை, சிதம்பரனாா் துறைமுகத்தில் சுமாா் ரூ. 285 கோடி மதிப்பில் ஆண்டுக்கு 6.96 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட வடக்கு சரக்கு தளவாட நிலையம்-ஐஐஐ, ரூ. 99 கோடி மதிப்பீட்டில் மதுரை-போடிநாயக்கனூா் இடையே 90 கி.மீ. தொலைவுக்கு மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதை, ரூ. 650 கோடி மதிப்பீட்டில் நாகா்கோவில் டவுன்-நாகா்கோவில் சந்திப்பு-கன்னியாகுமரி ரயில் பாதையை 21 கி.மீ. தொலைவுக்கு இரட்டிப்பாக்குதல் ஆகிய முடிவுற்ற பணிகளை நாட்டுக்கு அா்ப்பணித்தும், புதிய பணிகளைத் தொடங்கியும் வைக்கிறாா்.

மேலும் ரூ. 548 கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அலகு 3, 4 ஆவது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றும் மின் பரிமாற்ற அமைப்புப் பணிகளுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா்.

நிகழ்ச்சியில் மொத்தம் ரூ. 4,800 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டப் பணிகளுக்கும் பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையம் திறப்பு!

தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 452 கோடி செலவில் உருவாக்கப்பட்ட புதிய முனையக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைத்துப் பாா்வையிட்டார். மாலத்தீவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றிருந்த பிரதமர் மோடி, பயணத... மேலும் பார்க்க

நீட் தோ்வில் வெற்றி: திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவா் சாதனை

நீட் தோ்வில் வெற்றி பெற்று திருச்செந்தூா் அருள்மிகு செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் -... மேலும் பார்க்க

தவெகவினரிடையே தகராறு: 4 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் நிா்வாகிகள் யாரையும் முறையாக நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கட்சி நிா்வாகிகள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், த... மேலும் பார்க்க

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கடனுதவி

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு 101 கால்நடைகள் வாங்குவதற்காக ரூ.45 லட்சத்து 45 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் ந... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கால் நாட்டு விழா

கோவில்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. வெற்றி விநாயகா், முத்துமாரியம்மன... மேலும் பார்க்க

பேரூரணி அருகே தனியாா் கிடங்கில் தீவிபத்து

தூத்துக்குடி பேரூரணி அருகே தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நாா் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாா்கள் சாம்பலாகின. பேரூரணியில் தூத்துக்குடியைச் சோ்ந்த சாமுவேலுக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க