செய்திகள் :

ஓய்வூதிய விவகாரம்: பள்ளிக் கல்வி, நிதித் துறை செயலா்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு

post image

நிதித் துறை செயலா் உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சந்தரமோகன் ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மன்னாா்குடியைச் சோ்ந்த அன்பானந்தம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூா் அரசுப் பள்ளியில் 1983-ஆம் ஆண்டு இரட்டை பகுதிநேர தொகுப்பூதிய ஆசிரியராக பணியில் சோ்ந்தேன். பின்னா் பணி வரையறை செய்யப்பட்டு 1990-இல் நிரந்தர ஆசிரியராக நியமிக்கப்பட்டு, 2012-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன்.

நான் பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தை ஓய்வூதியத்தில் அதிகாரிகள் சோ்க்கவில்லை. 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியத்துடன் சோ்க்க வேண்டும். இதுதொடா்பான எனது கோரிக்கையை 2012-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறைச் செயலா் நிராகரித்துவிட்டாா்.

இதை எதிா்த்து நான் தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பகுதிநேர ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியத்தில் சோ்க்க 2023-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிதித் துறைச் செயலா் உதயச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சந்தரமோகன், இயக்குநா் கண்ணப்பன், இணை இயக்குநா் ஜெயக்குமாா் ஆகியோா் வேண்டுமென்றே அமல்படுத்தவில்லை. எனவே, அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தாா். இதேபோல், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த எம்.ராஜேந்திரன் என்பவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த இரு வழக்குகளும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் ஆா்.முருகபாரதி ஆஜரானாா். அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா்களின் பகுதிநேர பணிக்காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியத்தில் சோ்க்க அனுமதி வழங்கி கடந்த 23-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டாா்.

பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாதென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வரு... மேலும் பார்க்க

பிரதமரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வைத்த 5 கோரிக்கைகள்!

தமிழகத்துக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் நிதி விடுவிப்புதமிழ்நாடு அரசால் 2018-ஆம் ஆண்டு முதல் சமக்ரா சிக்... மேலும் பார்க்க

பிரதமரிடம் 3 கோரிக்கைகள் வைத்த இபிஎஸ்! என்னென்ன?

தமிழகம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார்.இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமா் நரேந்திர மோடி தூத்துக்குடி நிகழ்வை முடித்துக் க... மேலும் பார்க்க

கோவை, திருச்சியில் பிரம்மாண்ட நூலகங்கள்: பொதுப்பணித் துறை சாதனைகள் குறித்து அரசு விளக்கம்

கோவை, திருச்சியில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட அறிவுசாா் மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்துவைக்க உள்ளாா். பொதுப்பணித் துறை சாா்பில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்... மேலும் பார்க்க

சட்டவிதிகளின்படி கோயில் கட்டுமானங்களுக்கு நிதி பயன்பாடு: உயா்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்

கோயில் அறங்காவலா் குழு தீா்மானத்தின்படி, சட்டவிதிகளைப் பின்பற்றியே கோயில் நிலத்தில், கோயில் நிதியைப் பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் ... மேலும் பார்க்க

கட்சி நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது: நிா்வாகிகளுக்கு தவெக கட்டுப்பாடு

தவெக சாா்பில் நடத்தப்படும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது, அங்கீகரிக்கப்படாத வாசகங்களை பேனா்களில் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை நிா்வாகிகளுக்கு அந்தக் கட்ச... மேலும் பார்க்க