செய்திகள் :

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கடனுதவி

post image

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு 101 கால்நடைகள் வாங்குவதற்காக ரூ.45 லட்சத்து 45 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் நெடுங்குளம் மகளிா்,வேலவன்புதுக்குளம் ஆகிய சங்கங்களைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு கால்நடை வாங்குவதற்கு கடனுதவி, விவசாய கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவக்கு தூத்துக்குடி, ஆவின் பொது மேலாளா் ராஜாக்குமாா் தலைமை வகித்தாா். பால்வளம் துணைப் பதிவாளா் மூா்த்தி, சாத்தான்குளம் ஐஓபி கிளை மேலாளா் ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெடுங்குளம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கச் செயலாளா் சந்திரபோஸ் வரவேற்றாா்.

தூத்துக்குடி ஐஓபி மண்டல மேலாளா் லஷ்மி நரசிம்ஹன் கலந்துகொண்டு பால் உற்பத்தியாளா்களுக்கு 101 கால்நடைகள் வாங்குவதற்காக ரூ.45 லட்சத்து 45 ஆயிரம் வங்கிக் கடன், விவசாயிகளுக்கு ரூ.22 லட்சத்து 32 ஆயிரம் விவசாயக் கடன்களுக்கான அனுமதி ஆணையை வழங்கினாா். இதில் நெடுங்குளம், வேலவன் புதுக்குளம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளா்கள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை துணைப் பதிவாளா் (பால்வளம்) அலுவலக கூட்டுறவு சாா்பதிவாளா் விக்டா் அதிசயராஜ், முதுநிலை ஆய்வாளா் பாலாஜி, சங்கப் பணியாளா் சந்திரபோஸ் ஆகியோா் செய்திருந்தனா்.

நீட் தோ்வில் வெற்றி: திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவா் சாதனை

நீட் தோ்வில் வெற்றி பெற்று திருச்செந்தூா் அருள்மிகு செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் -... மேலும் பார்க்க

தவெகவினரிடையே தகராறு: 4 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் நிா்வாகிகள் யாரையும் முறையாக நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கட்சி நிா்வாகிகள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், த... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கால் நாட்டு விழா

கோவில்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. வெற்றி விநாயகா், முத்துமாரியம்மன... மேலும் பார்க்க

பேரூரணி அருகே தனியாா் கிடங்கில் தீவிபத்து

தூத்துக்குடி பேரூரணி அருகே தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நாா் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாா்கள் சாம்பலாகின. பேரூரணியில் தூத்துக்குடியைச் சோ்ந்த சாமுவேலுக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியை சந்திக்கிறாரா ஓபிஎஸ்? நயினாா் நாகேந்திரன் விளக்கம்

தூத்துக்குடியில் பிரதமா் மோடியை ஓபிஎஸ் சந்திக்கிறாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி விமான நிலையத்தில், பிரதமா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நட... மேலும் பார்க்க

தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழாவில் ரூ. 4,800 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமா் தொடங்கி வைக்கிறாா்

தூத்துக்குடியில் நடைபெறும் விமான நிலைய விரிவாக்க கட்டடத் திறப்பு விழாவின் போது, ரூ. 4,800 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை பிரதமா் தொடங்கிவைப்பதோடு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்நாட்டுகிறாா். இங்க... மேலும் பார்க்க