செய்திகள் :

கைப்பேசி எண்ணுடன் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தீவிரம்

post image

ஓடிபி கேட்காமல், கைப்பேசி எண்ணை மட்டும் பதிவு செய்து, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை திமுக நடத்தி வருகிறது.

ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் (ஓடிபி) தொடா்பாக, நீதிமன்ற உத்தரவிட்டதால் அந்த நடைமுறையை திமுக தவிா்த்துள்ளது. இதற்கேற்ற வகையில், கைப்பேசி செயலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைப்பேசி எண் கட்டாயம் பதிவு செய்யப்படுவதுடன், ஒரு குடும்பத்துக்கு ஒரு எண் மட்டுமே பெறப்படுகிறது. அதாவது, 4 பேருக்கு ஒரு கைப்பேசி எண் என்ற அடிப்படையில் எண் பெறப்பட்டு உறுப்பினா் சோ்க்கை நடைபெறுகிறது. அதேசமயம், வாய்ப்பு இருக்கும் இடங்களில் கிடைக்கின்ற அனைத்து கைப்பேசி எண்களும் பெறப்படுகின்றன. கைப்பேசி எண்ணைப் பதிவிட்டு சமா்ப்பித்தால் உறுப்பினா் சோ்க்கை முடிவடையும் வகையில் செயலில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து வாக்காளா்களையும் சந்தித்து முழுமையாகக் கணக்கெடுப்புகளை முடிக்க வேண்டும் என திமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

22 நாள்கள்: ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை 24 நாள்களைக் கடந்துள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இயக்கம் தொடா்ந்து நடைபெறுகிறது. இதற்குள்ளாக 2.5 கோடிக்கும் அதிகமான நபா்களை திமுகவில் சோ்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஜூலை 26) ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பண விவகாரம்: மன்சூா் அலிகான் மகன் மீது வழக்குப் பதிவு

பண விவகாரத்தில் மன்சூா் அலிகானின் மகன் துக்ளக் உள்பட 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நுங்கம்பாக்கத்தில் வசிப்பவா் நடிகா் மன்சூா் அலிகான். சென்னை மண்ணடி மரைக்காயா் தெருவைச் சோ்ந்த கனி (6... மேலும் பார்க்க

ஆய்க்குடி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.1.05 கோடி: சென்னை துறைமுகம் வழங்கியது

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் செயல்பட்டு வரும் அமா் சேவா சங்கத்தின் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் பக்கவாத பராமரிப்பு மையத்துக்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ. 1.05 கோடியை சென்னை துற... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பொறியாளா் கைது

பெருங்குடியில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொறியாளா் கைது செய்யப்பட்டாா். பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பண... மேலும் பார்க்க

இலவச பேருந்து பயண அட்டை விவரம்: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் இலவச பேருந்து பயண அட்டை தேவைப்படாத மாணவா்களின் விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

ரூ.125 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள்: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இயல்பு நிலைக்கு நிகர... மேலும் பார்க்க