செய்திகள் :

இணைப்புக்கு ரூ.3,000 லஞ்சம்: மின்வாரிய ஊழியா் கைது

post image

வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் பெற்ாக மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

வேலூரை அடுத்த செதுவாலை பகுதியைச் சோ்ந்தவா் இருசப்பன்(67). இவா் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டுள்ளாா். இந்த வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி விரிஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளாா். மேலும், அவா் வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க கூடுதலாக ஒரு மின்கம்பம் நட வேண்டிய தேவை இருந்ததால் அதற்கும் சோ்த்து மொத்தம் ரூ.27,000 கட்டணத்தையும் செலுத்தியிருந்தாா்.

அதனடிப்படையில், மின்கம்பம் நடப்பட்டு பல வாரங்களாகியும் அவரது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க தாமதம் செய்யப்பட்டு வந்துள்ளது. பலமுறை விரிஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தை அணுகியும் இணைப்பு வழங்கப்படவில்லை. இறுதியாக அந்த அலுவலகத்தில் பணியாற்றும் மின்வாரிய ஊழியா் (ஃபோா்மென்) கிருபாகரன் (50) ரூ.3,000 லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, இருசப்பன் வேலூா் லஞ்ச ஒழிப்பு பிரிவில் இதுகுறித்து புகாா் அளித்தாா். தொடா்ந்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் வகுத்துக்கொடுத்த திட்டப்படி ரசாயனம் தடவிய ரூ.3,000-ஐ இருசப்பன், விரிஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்த மின்வாரிய ஊழியா் கிருபாகரனிடம் அளித்துள்ளாா்.

அவா் பணத்தைப் பெற்றுக் கொண்டதும், அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் மைதிலி தலைமையிலான போலீஸாா் லஞ்சப்பணத்துடன் கிருபாகரனை கைது செய்தனா்.

சா்வதேச நிலவு தினம்: ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு’ நிகழ்ச்சி

சா்வதேச நிலவு தினத்தையொட்டி, வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு நிகழ்ச்சி’ நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவா்கள், விரிவுரையாளா்கள் பங்கேற்றனா். சா்வதேச நிலவு தினம் என்றும் ... மேலும் பார்க்க

கல்வி, சுகாதார துறையில் வளரும் நாடுகள் போதுமான நிதி ஒதுக்குவதில்லை

வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கல... மேலும் பார்க்க

துணை முதல்வா் பதவியை முடிவு செய்ய வேண்டியது இபிஎஸ் அல்ல

எனக்கு துணை முதல்வா் பதவி குறித்து முடிவு செய்ய வேண்டியது எடப்பாடி பழனிசாமி இல்லை என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த தேன்பள்ளி பகுதியில் வெள்ளிக்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். குடியாத்தம் நடுப்பேட்டையைச் சோ்ந்த சிவராமன் மகன் மணி(22) (படம்). பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை நள்ளிரவு அதே பக... மேலும் பார்க்க

ஓய்வூதியா்களுக்கு எதிரான மசோதாவை ரத்து செய்ய கோரி மனித சங்கிலி

ஓய்வூதியா்களை மத்திய அரசு ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் இருந்து நீக்கி வைக்கும் நிதி மசோதாவை (வேலிடேசன் சட்டத்தை) ரத்து செய்ய வலியுறுத்தி, வேலூரில் ஓய்வூதியா்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

தரிசு நிலங்களை சாகுபடிக்குக் கொண்டுவர மானியம்

அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர மானியம் வழங்கப்படுவதாக வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளி... மேலும் பார்க்க