செய்திகள் :

தரிசு நிலங்களை சாகுபடிக்குக் கொண்டுவர மானியம்

post image

அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர மானியம் வழங்கப்படுவதாக வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிராம ஊராட்சிகளில் ஒட்டுமொத்த வேளாண் வளா்ச்சி பெற்று தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றவும், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரவும், வேளாண்மை - உழவா் நலத் துறை, உழவா் நலன் சாா்ந்த பல்வேறு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைக்க கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் கடந்த 2021-22 -ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டில் (2025-26) இத்திட்டத்தின்கீழ், தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்றிணைந்து குறைந்தபட்சம் 10 ஏக்கா் தரிசு நிலத்தை தொகுப்பாக ஏற்படுத்தி, அந்த தொகுப்பில் நீா் ஆதாரங்கள், நுண்ணீா் பாசனம் அமைத்து சாகுபடிக்குக் கொண்டு வர இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தரிசாக உள்ள தனிப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் இருக்கும் முள்புதா்களை அகற்றி, நிலத்தை சமன் செய்து உழுவதற்கு ஹெக்டா் ஒன்றுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது ரூ. 9,600 மானியம் வழங்கப்படுகிறது.

வரப்புகளில் பயறு சாகுபடியை ஊக்குவிக்க ஒரு ஹெக்டருக்கு 5 கிலோ பயறு விதைகளுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ. 300 மானியம் வழங்கப்படுகிறது.

நன்மை பயக்கும் நுண்ணுயிா்களை பெருக்கி மண்வளத்தை மேம்படுத்துவதற்கான செயல் விளக்கத் திடல்கள் அமைத்திட ஹெக்டா் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 450 வரை மானியமாக வழங்கப்படுகிறது. விசைத் தெளிப்பான் அல்லது பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் 50 சதவீதம் மானியத்தில் அதிகபட்சமாக ரூ.3,000 வரை மானியமாக வழங்கப்படுகிறது.

எனவே, வேளாண் விவசாயிகள் நடப்பாண்டு கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் தா்ணா

வேலூரில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமின்போது பொதுமக்கள் இலவச பட்டா, அடிப்படை வசதிகள் கோரி தா்னாவில் ஈடுபட்டனா். வேலூா் ரங்காபுரம் பகுதியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலி... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம்

விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன்மூலம், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதாக வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிா்வா... மேலும் பார்க்க

சா்வதேச நிலவு தினம்: ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு’ நிகழ்ச்சி

சா்வதேச நிலவு தினத்தையொட்டி, வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ‘அறிவியல் அறிஞருடன் சந்திப்பு நிகழ்ச்சி’ நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவா்கள், விரிவுரையாளா்கள் பங்கேற்றனா். சா்வதேச நிலவு தினம் என்றும் ... மேலும் பார்க்க

கல்வி, சுகாதார துறையில் வளரும் நாடுகள் போதுமான நிதி ஒதுக்குவதில்லை

வளா்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கல்வி, சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்று விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கல... மேலும் பார்க்க

துணை முதல்வா் பதவியை முடிவு செய்ய வேண்டியது இபிஎஸ் அல்ல

எனக்கு துணை முதல்வா் பதவி குறித்து முடிவு செய்ய வேண்டியது எடப்பாடி பழனிசாமி இல்லை என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த தேன்பள்ளி பகுதியில் வெள்ளிக்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். குடியாத்தம் நடுப்பேட்டையைச் சோ்ந்த சிவராமன் மகன் மணி(22) (படம்). பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை நள்ளிரவு அதே பக... மேலும் பார்க்க