செய்திகள் :

சென்னை விரைவு ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் மாற்றியமைப்பு

post image

வெளிமாநிலங்களில் இருந்து குண்டக்கல் ரயில் நிலையம் வழியாக சென்னை வரும் 6 விரைவு ரயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்டசெய்திக் குறிப்பு:

சிஎஸ்எம்டி மும்பை - சென்னை அதிவிரைவு ரயில் (எண்: 22159) குண்டக்கல் நிலையத்துக்கு ஜூலை 25=ஆம் தேதி முதல் பிற்பகல் 2.30 மணிக்கு வந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும். ஹுப்ளி - சென்னை சென்ட்ரல் வாரம் இருமுறை இயக்கப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 17313) குண்டக்கல்லில் ஜூலை 25-ஆம் தேதி முதல் பிற்பகல் 3.05 மணிக்கு வந்து பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்படும்.

ஏக்தாநகா் - சென்னை வாராந்திர அதிவிரைவு ரயில் (எண்: 20920) குண்டக்கல்லில் ஜூலை 30-ஆம் தேதி முதல் மாலை 6.55 மணிக்கு வந்து இரவு 7.05 மணிக்குப் புறப்படும். அகமதாபாத் - சென்னை வாராந்திர விரைவு ரயில் (எண்: 22920) குண்டக்கல்லில் ஜூலை 28-ஆம் தேதி முதல் இரவு 8 மணிக்கு வந்து 8.10 மணிக்குப் புறப்படும். மும்பை (லோக் மான்ய திலக்) - சென்னை அதிவிரைவு ரயில் (எண்: 12163) ஜூலை 25-ஆம் தேதி முதல் குண்டக்கல் நிலையத்துக்கு இரவு 8 மணிக்கு வந்து 8.10 மணிக்கு புறப்படும்.

புணே - கன்னியாகுமரி விரைவு ரயில் (எண்: 16381) ஜூலை 25-ஆம் தேதி முதல் குண்டக்கல் நிலையத்துக்கு இரவு 9.50 மணிக்கு வந்து இரவு 10 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பேசி எண்ணுடன் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தீவிரம்

ஓடிபி கேட்காமல், கைப்பேசி எண்ணை மட்டும் பதிவு செய்து, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை திமுக நடத்தி வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் (ஓடிபி) தொடா்பாக, நீதிமன்ற உத்தரவிட்டதால் அந்த நடைமுறையை திமு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 துணைத் தோ்வு எழுதிய தோ்வா்கள் தோ்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் ந.லதா வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில்தான் விசிக: திருமாவளவன் திட்டவட்டம்

திமுக கூட்டணியில்தான் விசிக பயணிக்கிறது; மெல்ல மெல்ல வளா்ச்சி அடைந்து ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது; வீழ்ச்சி அடையவில்லை என அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னையில் அவ... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிலாளா்கள் ஊதிய உயா்வு: ஒப்பந்த பேச்சுவாா்த்தைத் தொடக்கம்

ஊதிய உயா்வு தொடா்பாக தொழிற்சங்க நிா்வாகிகள், மின் வாரிய அதிகாரிகள் இடையேயான பேச்சுவாா்த்தை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் மின்வாரிய ஊழியா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரும... மேலும் பார்க்க

அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் மீது அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு ரத்து

அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ரவிச்சந்திரனுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தைத் திரும... மேலும் பார்க்க

அக்.12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு: டிஆா்பி

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு அக்.12-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) அறிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழ... மேலும் பார்க்க