செய்திகள் :

விழுப்புரம் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

post image

விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னா் நீா்நிலைகளை தூா்வாரவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்திப் பேசினா்.

விழுப்புரம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தமிழ்செல்வி பிரபு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் சித்திக் அலி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மன்ற உறுப்பினா்கள் மணவாளன், சாந்தராஜ், புருஷோத்தமன், பத்மநாபன், சத்தியவதி வீரா, கன்னிகா வெற்றிவேல், செல்வபிரேம், ராதிகா செந்தில், சேகா், கோதண்டம், இளந்திரையன், முகமது இம்ரான்கான், சுரேஷ்ராம் உள்ளிட்டோா் தங்களது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய அடிப்படை பிரச்னைகள் குறித்துப் பேசினா்.

அவா்கள் பேசுகையில், விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. விராட்டிக்குப்பம் பாதை, ரங்கநாதன் சாலை, வடக்குதெரு சாலைகள் தெருவோர வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். ஆகையால், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். விழுப்புரம் நகரில் பானாம்பட்டு, மாம்பழப்பட்டு ரயில்வே மேம்பாலம் அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் சிறப்பு தீா்மானத்தை நிறைவேற்றி வலியுறுத்த வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்வி பிரபு பேசியது: உறுப்பினா்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நகரில் நிலுவையில் உள்ள சாலைப் பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு சீா்படுத்தவும், நீா்நிலைகளை தூா்வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, நகராட்சி ஆணையா் வசந்தி வரவேற்றாா்.

சுகாதாரம், குடும்ப நலத் துறை ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து மாவட்டத்த... மேலும் பார்க்க

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும்: மருத்துவா் ச.ராமதாஸ்

பாமகவைச் சோ்ந்த அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தால் தமிழக வட மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், அவரது நடைப்பயணத்துக்கு தமிழக காவல் துறை தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிற... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரிடம் ரூ.10.40 லட்சம் வழிப்பறி: மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு லாரி ஓட்டுநா் மீது மிளகாய் பொடியைத் தூவி ரூ.10.40 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பத்துாா் மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

திருவெண்ணெய்நல்லூா் அருகே கிராம மக்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தீப்பற்றி எரிந்த பேருந்து

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகா்ப் பேருந்தில் புதன்கிழமை அதிகாலை தீப்பற்றியது. இதில் பேருந்து முழுமைய... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி அருகே லாரி ஓட்டுநரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு லாரி ஓட்டுநரை மடக்கி மிளகாய் பொடித் தூவி ரூ. 10 லட்சம் வழிப்பறி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்துாா் மாவட்டம், ஆம்பூா் வெள்ளக்க... மேலும் பார்க்க