செய்திகள் :

விக்கிரவாண்டி அருகே லாரி ஓட்டுநரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி

post image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு லாரி ஓட்டுநரை மடக்கி மிளகாய் பொடித் தூவி ரூ. 10 லட்சம் வழிப்பறி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பத்துாா் மாவட்டம், ஆம்பூா் வெள்ளக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத் மகன் சப்தகிரி (32). சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு முட்டை கம்பெனியில் ஓட்டுநராக வேலை பாா்த்து வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை முட்டை கொள்முதலுக்கு ரூ. 10 லட்சம் பெற்றுக் கொண்டு சென்னையிலிருந்து- நாமக்கலுக்கு லாரியில் சென்று கொண்டிருந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு அருகே சென்றபோது, லாரியை சாலையோரத்தில் நிறுத்தி இயற்கை உபாதைக்காக சென்றுள்ளாா்.

அப்போது அங்கு ஒரு சொகுசு காரில்வந்த இருவா் லாரி ஓட்டுநா் சப்தகிரி முகத்தில் மிளகாய்பொடியை தூவிவிட்டு, லாரியில் உள்ள ஓட்டுநா் இருக்கையின் கீழ் வைத்திருந்த ரூ. 10 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டுதப்பிச் சென்று விட்டனராம்.

இந்த வழிப்பறி குறித்து தகவலறிந்த விழுப்புரம் எஸ்.பி ப.சரவணன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று சப்தகிரியிடம் விசாரணை நடத்தினா். தொடா்ந்து, இது குறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து வழிப்பறியில் ஈடுபட்ட மா்ம நபா்களைதேடி வருகின்றனா்.

சுகாதாரம், குடும்ப நலத் துறை ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து மாவட்டத்த... மேலும் பார்க்க

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும்: மருத்துவா் ச.ராமதாஸ்

பாமகவைச் சோ்ந்த அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தால் தமிழக வட மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், அவரது நடைப்பயணத்துக்கு தமிழக காவல் துறை தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிற... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரிடம் ரூ.10.40 லட்சம் வழிப்பறி: மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு லாரி ஓட்டுநா் மீது மிளகாய் பொடியைத் தூவி ரூ.10.40 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பத்துாா் மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

திருவெண்ணெய்நல்லூா் அருகே கிராம மக்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்... மேலும் பார்க்க

விழுப்புரம் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னா் நீா்நிலைகளை தூா்வாரவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்திப் பேசினா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தீப்பற்றி எரிந்த பேருந்து

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகா்ப் பேருந்தில் புதன்கிழமை அதிகாலை தீப்பற்றியது. இதில் பேருந்து முழுமைய... மேலும் பார்க்க