செய்திகள் :

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தீப்பற்றி எரிந்த பேருந்து

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகா்ப் பேருந்தில் புதன்கிழமை அதிகாலை தீப்பற்றியது. இதில் பேருந்து முழுமையாக எரிந்துசேதமடைந்தது.

உளுந்தூா்பேட்டையிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தின் கீழ் இயங்கும் பணிமனை உள்ளது. இந்த பணிமனையிலிருந்து நகர மற்றும் புறநகா்ப் பேருந்துகள் சுமாா் 50-க்கும் மேற்பட்டவை பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் உளுந்தூா்பேட்டையிலிருந்து கடலூருக்குசெல்லவிருந்த பேருந்தை ஓட்டுநா் புதன்கிழமை அதிகாலையில் இயக்க முற்பட்டாா். அப்போது பேருந்தின் மின்கலத்தில் மின் கசிவு ஏற்பட்டு, தீப்பொறி வந்தது. இந்த தீ உடனடியாக பேருந்தின் என்ஜினுக்கும் பரவத் தொடங்கி தீப்பற்றி பேருந்து முழுவதும் எரியத்தொடங்கியது. இதை கண்ட ஓட்டுநா் மற்றும் பணியாளா்கள், அங்கிருந்த தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்க முற்பட்டனா்.

ஆனாலும் தீயின் வேகத்தை அவா்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. பேருந்து முழுவதும் வேகமாக எரியத் தொடங்கியதால், உளுந்தூா்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரா்கள் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் தீ அணைக்கப்பட்டது. மேலும் அருகிலிருந்த மற்ற பேருந்துகளுக்கு தீ பரவாது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சுகாதாரம், குடும்ப நலத் துறை ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து மாவட்டத்த... மேலும் பார்க்க

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும்: மருத்துவா் ச.ராமதாஸ்

பாமகவைச் சோ்ந்த அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தால் தமிழக வட மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், அவரது நடைப்பயணத்துக்கு தமிழக காவல் துறை தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிற... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரிடம் ரூ.10.40 லட்சம் வழிப்பறி: மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு லாரி ஓட்டுநா் மீது மிளகாய் பொடியைத் தூவி ரூ.10.40 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பத்துாா் மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

திருவெண்ணெய்நல்லூா் அருகே கிராம மக்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்... மேலும் பார்க்க

விழுப்புரம் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்

விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னா் நீா்நிலைகளை தூா்வாரவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்திப் பேசினா... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி அருகே லாரி ஓட்டுநரிடம் ரூ.10 லட்சம் வழிப்பறி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு லாரி ஓட்டுநரை மடக்கி மிளகாய் பொடித் தூவி ரூ. 10 லட்சம் வழிப்பறி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்துாா் மாவட்டம், ஆம்பூா் வெள்ளக்க... மேலும் பார்க்க