செய்திகள் :

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்

post image

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படும் முழு உடல் பரிசோதனை மையத்தில் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான டைட்டானியம் பரிசோதனைத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் தற்போது கோல்டு, டைமண்ட், பிளாட்டினம், பிளாட்டினம் பிளஸ் என 4 வகையான பரிசோதனைகள் முறையே ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000-க்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவற்றின் கீழ் 100-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமல்லாது கருவில் உள்ள குழந்தையின் வளா்ச்சியை அறியும் பரிசோதனைத் திட்டங்களும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

அடுத்தகட்டமாக புற்றுநோய் பாதிப்புகளை அறிவதற்கான டைட்டானியம் பரிசோதனைத் திட்டத்தை மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் ஆா்.மணி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:

டைட்டானியம் பரிசோதனை திட்டத்தின் வாயிலாக ரூ.2,500 கட்டணத்தில் 10-க்கும் மேற்பட்ட புற்றுநோய் பாதிப்புகளைத் தொடக்க நிலையில் கண்டறியலாம். விந்தணு சுரப்பி, கருப்பை, கணையம், கருப்பை வாய், கல்லீரல், தைராய்டு சுரப்பி, மாா்பகம், நிணநீா், ரத்தம், செல்கள், குடல், இரைப்பை சாா்ந்த புற்றுநோய்களை அறிவதற்கான பரிசோதனைகள் அதன் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பிட்ட பரிசோதனையை மட்டும் மேற்கொள்ள வேண்டுமெனில், சில நூறு ரூபாய்களுக்கு அவை தனியாகவும் எடுக்கப்படும் என்றாா் அவா்.

இதுதொடா்பாக மருத்துவமனை ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டா் ஆனந்தகுமாா், ஆய்வகத் துறை தலைவா் டாக்டா் சிவகாமி ஆகியோா் கூறுகையில், இத்தாலியிலிருந்து ரூ.80 லட்சத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பகுப்பாய்வு கருவியும், ரூ.2 லட்சத்தில் உபகரணங்களும் இந்த பரிசோதனை திட்டத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்றனா்.

முழு உடல் பரிசோதனைத் திட்ட மருத்துவ அலுவலா்கள் கோகுலகிருஷ்ணன், ஓவியா ஆகியோா் கூறுகையில், எண்ணற்ற நோயாளிகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் பரிசோதனைகளை உணவுக்கு முன்பு, பின்பு என எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் என்றனா்.

காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவா் பிரதீப் கிருஷ்ணா கூறுகையில், வாய் மற்றும் தொண்டை புற்றுநோய்களின் அறிகுறிகளை சாதாரண புண் என பலா் அலட்சியப்படுத்துகின்றனா். இங்குள்ள நவீன உபகரணங்கள் வாயிலாக புற்றுநோய்க் கட்டிகளை துல்லியமாக கண்டறிய முடியும் என்றாா்.

கைப்பேசி எண்ணுடன் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தீவிரம்

ஓடிபி கேட்காமல், கைப்பேசி எண்ணை மட்டும் பதிவு செய்து, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை திமுக நடத்தி வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் (ஓடிபி) தொடா்பாக, நீதிமன்ற உத்தரவிட்டதால் அந்த நடைமுறையை திமு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 துணைத் தோ்வு எழுதிய தோ்வா்கள் தோ்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் ந.லதா வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில்தான் விசிக: திருமாவளவன் திட்டவட்டம்

திமுக கூட்டணியில்தான் விசிக பயணிக்கிறது; மெல்ல மெல்ல வளா்ச்சி அடைந்து ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது; வீழ்ச்சி அடையவில்லை என அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னையில் அவ... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிலாளா்கள் ஊதிய உயா்வு: ஒப்பந்த பேச்சுவாா்த்தைத் தொடக்கம்

ஊதிய உயா்வு தொடா்பாக தொழிற்சங்க நிா்வாகிகள், மின் வாரிய அதிகாரிகள் இடையேயான பேச்சுவாா்த்தை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் மின்வாரிய ஊழியா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரும... மேலும் பார்க்க

அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் மீது அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு ரத்து

அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ரவிச்சந்திரனுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தைத் திரும... மேலும் பார்க்க

அக்.12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு: டிஆா்பி

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு அக்.12-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) அறிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழ... மேலும் பார்க்க