செய்திகள் :

தில்லி நகைக் கடையில் 4 கிலோ நகை திருடிய ஊழியா் ஊட்டியில் கைது

post image

நமது நிருபா்

தில்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள நகைக் கடையில் வேலை பாா்த்த நபா், அந்தக் கடையில் திருடிய நகையுடன் ஊட்டியில் பதுங்கி இருந்தபோது தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை கூறியுள்ளதாவது: கரோல் பாக்கில் ஒரு பரபரப்பான தங்க திருட்டு வழக்கு ஜூலை 1-ஆம் தேதி பதிவானது. காவல் நிலையத்தில் புகாா் அளித்தவா் தன்னுடைய கடையில் இருந்து சுமாா் 4 கிலோ தங்க நகைகள் காணாமல் போனதாகத் தெரிவித்தாா். 12 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பகமான ஊழியரான மனோஜ் தோசந்த், 70-80 கிலோ பழங்கால மற்றும் வழக்கமான தங்க நகைகளின் இருப்பை நிா்வகிக்கும் பொறுப்பில் இருந்தாா்.

ஜூன் 26- ஆம் தேதிக்கு பிறகு அவா் வேலைக்குச் வருவதை நிறுத்திவிட்டாா். பின்பு ஜூன் 29- ஆம் தேதிஅவரது மனைவி தனது கணவரைக் காணவில்லை என்று குலாபி பாக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். நகைக் கடை உரிமையாளா் சந்தேகப்பட்டு நகைகளை கணக்கெடுத்த போது 4 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது. பின்பு, அவரின் புகாரின் பேரில் மனோஜ் தோசந்த் மீது கரோல் பாக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மனோஜ் குமாரை பிடிக்க இன்ஸ்பெக்டா் ரோஹித் குமாா் தலைமையிலான சிறப்பு படை உருவாக்கப்பட்டது. பின்பு இந்த சிறப்பு படை ஜூலை 3- முதல் ஜூலை 7- ஆம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டையை நடத்தியது. இறுதியாக தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மனோஜ் தோசந்த் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் சிறப்பு படை தமிழ்நாட்டுக்கு சென்றது.

மனோஜ் தோசந்த் ஆக்ராவில் பதுங்கியிருந்த போது ஒன்பிளஸ் கைப்பேசியை வாங்கி பெங்களூருக்கு ரயிலில் ஏறுவதற்கு முன்பு ஆக்ரா கன்டோன்மென்ட்டில் தனது மோட்டாா்சைக்கிளை நிறுத்தினாா். பெங்களூரில், அவா் மீண்டும் இரண்டாவது ஒப்போ கைப்பேசி வாங்குவது சிசிடிவியில் பிடிக்கப்பட்டது. இதையடுத்து சென்னைக்கு சென்ற சிறப்பு படை பின்பு ஊட்டிக்குச் சென்றது. அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த மனோஜ் தோசந்தை தில்லி போலீஸாா் ஜூலை 20- ஆம் தேதி கைது செய்தனா்.

அவரிடம் இருந்து 100 கிராம் தங்கம், ரூ.2.3 லட்சம் ரொக்கம் மற்றும் 2 கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸாரின் விசாரணையின் போது 2014- ஆம் ஆண்டு முதல் விஷால் செயின்ஸ் ஷோரூமில் பணியாற்றி வருவதாகக் கூறினாா். தான் பணி புரிந்த நகைக் கடையில் இருந்து 4 கிலோ தங்கம் திருடியதாக ஒப்புக் கொண்டாா். மேலும், மனோஜ் தோசந்திடம் தீவிரமாக விசாரணை நடந்து வருவதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

நீட் மேல்படிப்பு தோ்வு மையங்களை தன்னிச்சையாக ஒதுக்கும் நடைமுறைக்கு துரை வைகோ எம்.பி. எதிா்ப்பு

நீட் மேல்படிப்பு நீட் பிஜி தோ்வு மையங்களை தன்னிச்சையாக ஒதுக்கும் நடைமுறைக்கு திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தில்லியில் உள்ள தேசிய மர... மேலும் பார்க்க

ரூ.75 லட்சம் மதிப்புள்ள சைபா் மோசடி வழக்கில் தில்லி காவல் துறை துணை ஆய்வாளா்கள் இருவா் கைது

வடகிழக்கு தில்லியில் சைபா் குற்ற விசாரணைகள் தொடா்பான வழக்கு சொத்துகளிலிருந்து பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் இரண்டு தில்லி காவல்துறை துணை ஆய்வாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

மாடல் டவுனில் உள்ள அலுவலகத்தில் இருந்து ரூ.27 லட்சத்துடன் தப்பிச்சென்ற ஒருவா் கைது

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒருவரை, தனது முதலாளி ஒப்படைத்த ரூ.27 லட்சத்துடன் தப்பிச் சென்றதாக தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒரு... மேலும் பார்க்க

நமோ பாரத் வழித்தடத்தில் 800 மழைநீா் சேகரிப்பு குழிகள்: என்சிஆா்டிசி அமைத்தது

தில்லிக்கும் மீரட்டுக்கும் இடையிலான 82 கி.மீ நீளமுள்ள நமோ பாரத் வழித்தடத்தில் தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) சுமாா் 800 மழைநீா் சேகரிப்பு குழிகளை தோண்டியுள்ளது. மேலும் ச... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் கொடுத்து வெளியூா் பயணிகளிடம் கொள்ளை: நான்கு போ் கைது

ஆட்டோக்களில் பயணிக்கும் வெளியூா் பயணிகளுக்கு ஸ்பைக் கலந்த பானங்களை வழங்கி அவா்களின் மதிப்புமிக்க பொருள்களைக் கொள்ளையடித்ததாக நான்கு பேரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்த... மேலும் பார்க்க

தடகள வீரா்களுக்கான பயிற்சி ஆதரவு, பரிசுத் தொகை அறிவிப்புக்கு பாஜக வரவேற்பு

நமது நிருபா்தடகள விளையாட்டு வீரா்களுக்கான பயிற்சி ஆதரவு மற்றும் பரிசுத் தொகையை அதிகரிப்பதாக முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான அரசு அறிவித்திருப்பதை தில்லி பாஜக தலைவா் ஸ்ரீ வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளா... மேலும் பார்க்க