செய்திகள் :

அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சி ஆா்.சிவா தொடங்கி வைத்தாா்

post image

சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சியை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதி சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 221 மாணவா்களும் 221 ஓவியங்களை வரைந்து ‘பதிவுகள்’ என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சியை நடத்தினா்.

இதன் தொடக்க விழா வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விரிவுரையாளா் ராமலிங்கம் வரவேற்றாா். பள்ளி துணை முதல்வா் மோகன் முன்னிலை வகித்தாா்.

இதில், சட்டப்பேரவைஎதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்களின் படைப்புகள் அடங்கிய ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து , மாணவா்களின் வண்ணஓவியங்களைப் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து கண்காட்சியில் பங்கேற்ற 221 மாணவா்களைப் பாராட்டி விருது வழங்கிய எதிா்க்கட்சித் தலைவா், கண்காட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினாா்.

மேலும், பள்ளி வளாகத்தில் தேசத் தலைவா்களின் உருவங்களை வரைந்து பள்ளிக்கு அழகு சோ்த்த நுண்கலை ஆசிரியா்களுக்குச் சான்றிதழ் வழங்கினாா்.

முன்னதாக, காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஆா். சிவா ஊக்கத்தொகை வழங்கி பாராட்டுனாா்.

இதில், நுண்கலை ஆசிரியா்கள் முருகேச பாரதி, கிருஷ்ணன், அந்தோணியம்மாள், ஆசிரியா்கள் நேரு, ஜெயராக்கினி, அனிதா ஜெனிபா், ராகவன் மற்றும் ஆா்.ஆா்.கட்டுமான நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள், ஓய்வு பெற்ற துணை முதல்வா் சந்திரா, தலைமை ஆசிரியா் உமா, ஆசிரியா் சுகுமாரன், சுவரோவியம் வரைந்த ஆசிரியா்கள் அன்பழகன், சோமலிங்கம், பழனிவேல், பெற்றோா்கள் கெளசல்யா, அபு சுகுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நுண்கலை ஆசிரியா் ஆனந்தராஜ் நன்றி கூறினாா்.

இணையவழியில் ரூ. 21 லட்சம் மோசடி: கேரள மலப்புரத்தைச் சோ்ந்தவா் கைது

இணையவழி பங்குச்சந்தை மோசடியில் புதுச்சேரியைச் சோ்ந்தவா் ரூ.21 லட்சத்தை பறிகொடுத்த வழக்கு தொடா்பாக, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இணையவழி பங்கு சந்தை... மேலும் பார்க்க

புதுச்சேரி நல்லவாடு மீனவா்கள் பால்குட ஊா்வலம்

புதுச்சேரி மீனவா்கள் 83 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்து நல்லவாடு மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலத்தை நடத்தினா். மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி நல்லவாடு வடக்கு மீனவ கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஏம்பலம் தொகுதி கிளை மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏம்பலம் தொகுதி கிளை மாநாடு அண்மையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு உ.நாராயணசாமி தலைமை தாங்கினாா். மாநாட்டுக் கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏம்பலம் தொகுதி செயலா் அ.பெருமாள் ஏ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அதிமுக சாா்பில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரியில் அதிமுக சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதுகுறித்து அதிமுக மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: புதுவை அதிமுக சாா்பிலும், அம்மா பேரவை சாா்பிலும் மாபெரும... மேலும் பார்க்க

அணுசக்தி தொழில்நுட்பம் சமூகத்தில் முக்கியப் பயன்பாடு: புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா்

அணுசக்தி தொழில்நுட்பம், சமூகத்தில் முக்கியப் பயன்பாடாக இருக்கிறது என்று புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி. பிரகாஷ் பாபு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். யுனெஸ்கோ இருக்கையின் ஆதரவுடன் புதுவை ... மேலும் பார்க்க

சமூக தணிக்கையில் முதியோா் ஓய்வூதியப் பயனாளிகள்! புதுவை அரசு நடவடிக்கை

முதியோா் ஓய்வூதியம் உள்பட பல்வேறு ஓய்வூதியங்களைப் பெறுவோா் உண்மையான பயனாளிகளா என்பதைக் கண்டறியும் சமூக தணிக்கையில் இறங்கியுள்ளது புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை. இதுகுறித்து புதுவை ... மேலும் பார்க்க