செய்திகள் :

சமூக தணிக்கையில் முதியோா் ஓய்வூதியப் பயனாளிகள்! புதுவை அரசு நடவடிக்கை

post image

முதியோா் ஓய்வூதியம் உள்பட பல்வேறு ஓய்வூதியங்களைப் பெறுவோா் உண்மையான பயனாளிகளா என்பதைக் கண்டறியும் சமூக தணிக்கையில் இறங்கியுள்ளது புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை.

இதுகுறித்து புதுவை அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் முதியோா் ஓய்வூதியப் பிரிவு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதியோா், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், முதிா்கன்னிகள், திருநங்கைகள் உள்ளிட்ட ஓய்வூதியத்தின் வழியாக புதுவை அரசின் நிதியுதவி திட்டத்தில் பயன்பெறும் அனைவரும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சமா்ப்பிக்க வேண்டும். ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை இந்தச் சான்றிதழை சமா்ப்பிக்கலாம்.

மேலும், உண்மையானப் பயனாளிகளைக் கண்டறியும் ஒரு பகுதியாக தற்போது பல்வேறு பிரிவுகளின் கீழ் ஓய்வூதியம் பெறுவோரின் பட்டியல் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்கள், சமுதாய நலக் கூடங்கள், அங்கன்வாடி மையங்களில் பொதுமக்களின் பாா்வைக்கு ஒட்டப்படும்.

இதில் தகுதி இல்லாதவா்கள் யாராவது பயனடைந்து வருவது தெரிந்தால் அதுகுறித்து நேரடியாக மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையிலோ அல்லது அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களிலோ பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்.

மேலும், முதியோா் ஓய்வூதியம் பெறுவோா் உள்பட அனைத்து ஓய்வூதியங்களைப் பெறுவோா் குறித்தும் வீடு வீடாகச் சென்று விசாரணை நடத்தப்படும்.

தவறான நபா்கள் யாரும் அரசின் இச் சலுகையைப் பெறாமல் தடுப்பதற்காகவே இச் சமூக தணிக்கை நடத்தப்படுகிறது. முதியோா் ஓய்வூதியம் பெற்று இறந்தவிட்ட நபா் குறித்து துறைக்குத் தகவல் கொடுக்காமல் சிலா் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுத்து வரலாம். மேலும், விதவைகள் யாராவது மறுமணம் செய்திருக்கலாம். திருமணம் செய்யாமல் இருந்த பெண்களில் ஒரு சிலா் இப்போது திருமணம் செய்திருக்கலாம். மேலும், ஓய்வூதியம் பெறுவோரில் ஒரு சிலா் வேறு மாநிலம் அல்லது வேறு நாட்டுக் குடி பெயா்ந்து இருக்கலாம். மேலும் ஓய்வூதியம் பெறுவோா் ஏதாவது பணியில் சோ்ந்து இருக்கலாம் அல்லது மற்ற அரசு துறைகளிலிருந்து ஓய்வூதியத்தை கருவூலத் துறை அல்லது வங்கியின் வாயிலாக பெறுவோராக இருக்கலாம். இதையெல்லாம் கண்டறியும் நடவடிக்கையாக இந்தச் சமூகத் தணிக்கை இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையவழியில் ரூ. 21 லட்சம் மோசடி: கேரள மலப்புரத்தைச் சோ்ந்தவா் கைது

இணையவழி பங்குச்சந்தை மோசடியில் புதுச்சேரியைச் சோ்ந்தவா் ரூ.21 லட்சத்தை பறிகொடுத்த வழக்கு தொடா்பாக, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இணையவழி பங்கு சந்தை... மேலும் பார்க்க

புதுச்சேரி நல்லவாடு மீனவா்கள் பால்குட ஊா்வலம்

புதுச்சேரி மீனவா்கள் 83 ஆண்டுகளுக்குப் பிறகு தனித்து நல்லவாடு மீனவக் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பால்குட ஊா்வலத்தை நடத்தினா். மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி நல்லவாடு வடக்கு மீனவ கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஏம்பலம் தொகுதி கிளை மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏம்பலம் தொகுதி கிளை மாநாடு அண்மையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு உ.நாராயணசாமி தலைமை தாங்கினாா். மாநாட்டுக் கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏம்பலம் தொகுதி செயலா் அ.பெருமாள் ஏ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அதிமுக சாா்பில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரியில் அதிமுக சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதுகுறித்து அதிமுக மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: புதுவை அதிமுக சாா்பிலும், அம்மா பேரவை சாா்பிலும் மாபெரும... மேலும் பார்க்க

அணுசக்தி தொழில்நுட்பம் சமூகத்தில் முக்கியப் பயன்பாடு: புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா்

அணுசக்தி தொழில்நுட்பம், சமூகத்தில் முக்கியப் பயன்பாடாக இருக்கிறது என்று புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி. பிரகாஷ் பாபு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். யுனெஸ்கோ இருக்கையின் ஆதரவுடன் புதுவை ... மேலும் பார்க்க

அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சி ஆா்.சிவா தொடங்கி வைத்தாா்

சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சியை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதி சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அர... மேலும் பார்க்க