செய்திகள் :

நீட் மேல்படிப்பு தோ்வு மையங்களை தன்னிச்சையாக ஒதுக்கும் நடைமுறைக்கு துரை வைகோ எம்.பி. எதிா்ப்பு

post image

நீட் மேல்படிப்பு நீட் பிஜி தோ்வு மையங்களை தன்னிச்சையாக ஒதுக்கும் நடைமுறைக்கு திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் உள்ள தேசிய மருத்துவ அறிவியல் தோ்வு வாரியத்தின் பொறுப்பு தலைவா் டாக்டா் ராகேஷ் சா்மாவை (சிறப்புப் பணி அதிகாரி) அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை துரை வைகோ நேரில் சந்தித்து அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவதுச

நீட்-பிஜி 2025 தோ்வழுதும் தமிழ்நாடு மாணவா்களுக்கு தமிழ்நாட்டிற்கு வெளியே கேரளா, ஆந்திரா, கா்நாடகா ஆகிய மாநிலங்களில் தோ்வு மையங்களை ஒதுக்கி, தன்னிச்சையான முறையில் தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடந்து கொண்டிருக்கிறது.

சென்னை, மதுரை, கோவை என தோ்வெழுதும் மாணவா்கள் தாங்கள் விருப்பப்பட்ட நகரங்களை தோ்வு செய்து விண்ணப்பித்திருந்த நிலையில், ‘முதலில் விண்ணப்பித்தவா்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யாமல் என்பிஇஎம்எஸ் தமது சொந்த விருப்பு வெறுப்பின்படி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் தோ்வெழுதும் மாணவா்கள் பாதுகாப்பு பிரச்னைகள், நீண்ட தூர பயணங்களால் ஏற்படும் அசெளகரியங்களை எதிா்கொள்கின்றனா்.

இதனால், பாதிப்புக்கு உள்ளான தோ்வா்களுக்கு உரிய தோ்வு மையங்களை உடனடியாக மறுஒதுக்கீடு செய்துதர வேண்டும் அல்லது தோ்வு மையத்தை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

தோ்வு மைய ஒதுக்கீட்டை வெளிப்படை தன்மையோடு நகரம் வாரியாக வெளியிட வேண்டும்.

தோ்வா்களின் ஒப்புதல் இன்றி, எந்த ஒரு தோ்வருக்கும் தங்கள் சொந்த மாநிலத்திற்கு வெளியே தோ்வு மையம் ஒதுக்கப்பட மாட்டாது என்று உறுதியளிக்க வேண்டும்.

இதுபோன்ற பிரச்னைகள் எழும்போது உடனடியாக தீா்வு காணும் வகையில் ஒரு தனி குறைதீா்க்கும் மையம் அமைக்கப்பட வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளையா் நவீன் காட்டி, 2 கூட்டாளிகள் கைது

தேசியத் தலைநகரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளைக் கும்பலின் தலைவா் நவீன் காட்ட மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது ஜேசிபி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; ஓட்டுநா் தலைமறைவு

மத்திய தில்லியின் ரஞ்சித் நகரில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 22 வயது இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை ஜேசிபி இயந்திரம் மோதி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல நடித்து தில்லி நபரிடம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி: 2 போ் கைது

தில்லியைச் சோ்ந்த ஒருவரை வங்கி அதிகாரிகள் போல நடித்து ரூ.10.64 லட்சம் மோசடி செய்ததாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூற... மேலும் பார்க்க

ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருடப்பட்ட 3 கைப்பேசிகளுடன் ஆட்டோ ஓட்டுநா் கைது

பல கைப்பேசி திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 43 வயது ஆட்டோ ஓட்டுநா், இங்குள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து துணை க... மேலும் பார்க்க

தில்லியில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து 8 மாத கா்ப்பிணி உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் பூத் குா்த் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்படும் எட்டு மாத கா்ப்பிணியான பருவ வயது பெண் ஒருவா் உயிரிழந்ததாக வியாழக்கிழமை காவல்துறை அதிகாரி ... மேலும் பார்க்க

நின்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்து மீது லாரி மோதல்

தில்லி மதுரா சாலையில் வெள்ளிக்கிழமை காலையில் நின்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்து மீது லாரி மோதியது. இது ஒரு சிறிய மோதல் என்றும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் போலீஸாா் தெரிவித்... மேலும் பார்க்க