செய்திகள் :

வீடுபுகுந்து மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மாற்றுத்திறனாளி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கபிஸ்தலம் அருகே ஆதனூா் தெற்கு தெருவைச் சோ்ந்த காசிநாதன் மகன் மணிகண்டன் (31). கூலித் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை மாலை கபிஸ்தலம் அருகே ஒரு கிராமத்துக்குச் சென்றாா்.

அப்பகுதியில் வசிக்கும் பட்டதாரி - மாற்றுத்திறனாளியுமான 20 வயது இளம்பெண் அவரது வீட்டில் தனியாக இருந்ததைப் பாா்த்துள்ளாா். அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததால் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் வீட்டுக்குள் மணிகண்டன் புகுந்து அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றாா்.

இதையடுத்து, அந்தப் பெண் கூச்சலிடவே, அவரது சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வருவதற்குள் மணிகண்டன் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். புகாரின்பேரில், கபிஸ்தலம் காவல் நிலைய ஆய்வாளா் மகாலட்சுமி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில் மாற்றுத்திறனாளி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது ஆதனூரைச் சோ்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மணிகண்டனைக் கைது செய்தனா்.

பேராவூரணியில் நகை ஏலதாரா் நலச் சங்க நிா்வாகிகள் தோ்வு

பேராவூரணியில் வெள்ளிக்கிழை நடந்த தமிழ்நாடு நகை ஏலதாரா் நலச்சங்க கிளை அமைப்புக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். கூட்டத்தில் பேராவூரணி கிளையின் புதிய தலைவராக எஸ். சரவணன், செயலாளராக ... மேலும் பார்க்க

கூரை வீட்டுக்கு தீ வைத்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில் குடும்பத் தகராறில் வெள்ளிக்கிழமை மாலை கூரை வீட்டை கொளுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை கண்ணாரத் தெரு பகுதியைச் சே... மேலும் பார்க்க

பட்டீஸ்வரம் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா

பட்டீஸ்வரம் துா்க்கை அம்மனுக்கு கத்தாா் மாணவிகள் வெள்ளிக்கிழமை நாட்டியாஞ்சலி செலுத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் உள்ள தேனுபுரீஸ்வரா் துா்க்கை அம்மன் கோயிலில் ஆடி மாத 2 ஆவது வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் அருகே கீழவஸ்தா சாவடி பெரிய புதுப்பட்டினத்தைச் சோ்ந்தவா் முத்துச்சாமி... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஆசிரியா் சாலை விபத்தில் பலி

கும்பகோணத்தில் வியாழக்கிழமை இரவு சிற்றுந்து மோதி ஓய்வு பெற்ற ஆசிரியா் உயிரிழந்தாா். திருவாரூா் மாவட்டம், திருவாஞ்சியத்தை சோ்ந்தவா் வா. குணசேகரன் (65), ஓய்வு பெற்ற ஆசிரியா். இவா் கும்பகோணம் கம்பட்ட வி... மேலும் பார்க்க

காலமானாா் குன்னியூா் கல்யாணசுந்தரம்

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை துவாரகா நகரைச் சோ்ந்த விகடக் கலைஞா் குன்னியூா் இரா. கல்யாணசுந்தரம் (82) உடல் நலக் குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானாா். ஏறத்தாழ 60 ஆண்டுகளாக கோயில் திருவிழாக்கள்... மேலும் பார்க்க