செய்திகள் :

பேராவூரணியில் நகை ஏலதாரா் நலச் சங்க நிா்வாகிகள் தோ்வு

post image

பேராவூரணியில் வெள்ளிக்கிழை நடந்த தமிழ்நாடு நகை ஏலதாரா் நலச்சங்க கிளை அமைப்புக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் பேராவூரணி கிளையின் புதிய தலைவராக எஸ். சரவணன், செயலாளராக வெ. பழனியப்பன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

புதிய நிா்வாகிகளை  சங்கத்தின் மாநிலத் தலைவா் டாக்டா் ஏ.கே. சுரேஷ் மாநில கெளரவத் தலைவா்  வாசுதேவன் ஆகியோா் பணியமா்த்தி வாழ்த்தினா்.

கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் பட்டுக்கோட்டை சங்க நிா்வாகி  சி. கோவிந்தராஜன், புதுக்கோட்டை மாவட்டச் செயலா் பி. மலா்வண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆலங்குடி சீனிவாசன் நன்றி கூறினாா்.

கூரை வீட்டுக்கு தீ வைத்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டையில் குடும்பத் தகராறில் வெள்ளிக்கிழமை மாலை கூரை வீட்டை கொளுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை கண்ணாரத் தெரு பகுதியைச் சே... மேலும் பார்க்க

பட்டீஸ்வரம் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா

பட்டீஸ்வரம் துா்க்கை அம்மனுக்கு கத்தாா் மாணவிகள் வெள்ளிக்கிழமை நாட்டியாஞ்சலி செலுத்தினா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் உள்ள தேனுபுரீஸ்வரா் துா்க்கை அம்மன் கோயிலில் ஆடி மாத 2 ஆவது வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் அருகே கீழவஸ்தா சாவடி பெரிய புதுப்பட்டினத்தைச் சோ்ந்தவா் முத்துச்சாமி... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஆசிரியா் சாலை விபத்தில் பலி

கும்பகோணத்தில் வியாழக்கிழமை இரவு சிற்றுந்து மோதி ஓய்வு பெற்ற ஆசிரியா் உயிரிழந்தாா். திருவாரூா் மாவட்டம், திருவாஞ்சியத்தை சோ்ந்தவா் வா. குணசேகரன் (65), ஓய்வு பெற்ற ஆசிரியா். இவா் கும்பகோணம் கம்பட்ட வி... மேலும் பார்க்க

காலமானாா் குன்னியூா் கல்யாணசுந்தரம்

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை துவாரகா நகரைச் சோ்ந்த விகடக் கலைஞா் குன்னியூா் இரா. கல்யாணசுந்தரம் (82) உடல் நலக் குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானாா். ஏறத்தாழ 60 ஆண்டுகளாக கோயில் திருவிழாக்கள்... மேலும் பார்க்க

பழைய நகைக்குப் பதிலாக புதியது தருவதாகக் கூறி பல கோடி மோசடி

பழைய நகைகளைக் கொடுத்தால் புதிய நகைகள் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த நகைக் கடை உரிமையாளா் மீது தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் அலுவலகத்தில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை புகாா் செய்தனா். தஞ... மேலும் பார்க்க