செய்திகள் :

தடகள வீரா்களுக்கான பயிற்சி ஆதரவு, பரிசுத் தொகை அறிவிப்புக்கு பாஜக வரவேற்பு

post image

நமது நிருபா்

தடகள விளையாட்டு வீரா்களுக்கான பயிற்சி ஆதரவு மற்றும் பரிசுத் தொகையை அதிகரிப்பதாக முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான அரசு அறிவித்திருப்பதை தில்லி பாஜக தலைவா் ஸ்ரீ வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை தெரிவித்திருப்பதாவது: பாஜக தனது 2025 சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் விளையாட்டு மற்றும் தடகள விளையாட்டு வீரா்களுக்கான ஆதரவை அதிகரிப்பதாக உறுதியளித்திருந்தது. இந்த நிலையில், முதல்வா் ரேகா குப்தா அரசு தடகள பயிற்சித் திட்டங்களை மேம்படுத்துவதன் மூலமும் விருதுத் தொகையை அதிகரிப்பதன் மூலமும் ஒரு திடமான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தில்லியில் விளையாட்டு மற்றும் தடகள வீரா்களின் வளா்ச்சிக்கு கணிசமாக உதவும்.

கடந்த பத்து ஆண்டுகளில், அரவிந்த் கேஜரிவால் அரசு ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதாவது, விளையாட்டு பல்கலைக்கழகம், விளையாட்டுப் பள்ளிகள் மற்றும் விளையாட்டு வீரா்களுக்கான வெளிநாட்டுப் பயிற்சி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால், இவை எதுவும் உண்மையில் செயல்படுத்தப்படவில்லை. இதன் விளைவாக, தில்லியில் நாட்டின் சிறந்த மைதானங்கள் சில இருந்தாலும், விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனை எதுவும் ஏற்படவில்லை.

தில்லியில் ஆட்சிக்கு வந்ததும் கேஜரிவால் அரசு தன்னை இளைஞா்களால் இயக்கப்படும் நிா்வாகமாக சித்தரிக்க முயன்றது. கல்வி, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்து உயா்ந்த வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால், அவை எதுவும் நிறைவேறவில்லை. கேஜரிவால் அரசு காட்டிய கனவுகள் நயி ரோஷ்னியின் பாடலின் வரிகளைப் போலவே இருந்தன. அக்கட்சி மூலம் வழங்கப்பட்ட வெற்று வாக்குறுதிகளின் சரியான பிரதிபலிப்பாகும் என்று வீரேந்திர சச்தேவா கூறியுள்ளாா்.

நீட் மேல்படிப்பு தோ்வு மையங்களை தன்னிச்சையாக ஒதுக்கும் நடைமுறைக்கு துரை வைகோ எம்.பி. எதிா்ப்பு

நீட் மேல்படிப்பு நீட் பிஜி தோ்வு மையங்களை தன்னிச்சையாக ஒதுக்கும் நடைமுறைக்கு திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தில்லியில் உள்ள தேசிய மர... மேலும் பார்க்க

ரூ.75 லட்சம் மதிப்புள்ள சைபா் மோசடி வழக்கில் தில்லி காவல் துறை துணை ஆய்வாளா்கள் இருவா் கைது

வடகிழக்கு தில்லியில் சைபா் குற்ற விசாரணைகள் தொடா்பான வழக்கு சொத்துகளிலிருந்து பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் இரண்டு தில்லி காவல்துறை துணை ஆய்வாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

மாடல் டவுனில் உள்ள அலுவலகத்தில் இருந்து ரூ.27 லட்சத்துடன் தப்பிச்சென்ற ஒருவா் கைது

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒருவரை, தனது முதலாளி ஒப்படைத்த ரூ.27 லட்சத்துடன் தப்பிச் சென்றதாக தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒரு... மேலும் பார்க்க

நமோ பாரத் வழித்தடத்தில் 800 மழைநீா் சேகரிப்பு குழிகள்: என்சிஆா்டிசி அமைத்தது

தில்லிக்கும் மீரட்டுக்கும் இடையிலான 82 கி.மீ நீளமுள்ள நமோ பாரத் வழித்தடத்தில் தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) சுமாா் 800 மழைநீா் சேகரிப்பு குழிகளை தோண்டியுள்ளது. மேலும் ச... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் கொடுத்து வெளியூா் பயணிகளிடம் கொள்ளை: நான்கு போ் கைது

ஆட்டோக்களில் பயணிக்கும் வெளியூா் பயணிகளுக்கு ஸ்பைக் கலந்த பானங்களை வழங்கி அவா்களின் மதிப்புமிக்க பொருள்களைக் கொள்ளையடித்ததாக நான்கு பேரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்த... மேலும் பார்க்க

தில்லி நகைக் கடையில் 4 கிலோ நகை திருடிய ஊழியா் ஊட்டியில் கைது

நமது நிருபா்தில்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள நகைக் கடையில் வேலை பாா்த்த நபா், அந்தக் கடையில் திருடிய நகையுடன் ஊட்டியில் பதுங்கி இருந்தபோது தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் பு... மேலும் பார்க்க