செய்திகள் :

டிஎஸ்பி சுந்தரேசனுக்கு ஆதரவாகக் கருத்து: கிண்டி காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்

post image

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்ததாக, சென்னை கிண்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலா் செல்வம், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியாற்றியவா் சுந்தரேசன். இவா் காவல் துறை உயரதிகாரிகள் மீது புகாா் தெரிவித்து ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தாா். இதையடுத்து அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், சென்னை கிண்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் செல்வம் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் புதன்கிழமை பரவியது. அதில், டிஎஸ்பி சுந்தரேசன் சாஸ்திரி நகா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியபோது அவருக்கு ஜீப் ஓட்டுநராக இருந்தேன். அவா் நோ்மையானவா் என்று செல்வம் பேசியிருந்தாா்.

இதுகுறித்து காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தினா். பின்னா், செல்வத்தை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டது.

மருத்துவமனையில் அனுமதி: சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் இருந்த சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை காலை அனுமதிக்கப்பட்டாா். அவசர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்ட சுந்தரேசனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குரூப் 2, 2ஏ தேர்வு: 27-இல் கட்டண சலுகைக்கான நுழைவுத் தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் பெண் தேர்வர்கள், தமிழ் வழித்தேர்வர்களுக்கு சலுகை கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான தேர்வு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என ஆர்வம் ஐஏஎஸ் ... மேலும் பார்க்க

சென்னையில் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா இன்று தொடக்கம்

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நடத்தும் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா வியாழக்கிழமை (ஜூலை 24) தொடங்கி ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ... மேலும் பார்க்க

சென்னை விரைவு ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் மாற்றியமைப்பு

வெளிமாநிலங்களில் இருந்து குண்டக்கல் ரயில் நிலையம் வழியாக சென்னை வரும் 6 விரைவு ரயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க

சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு: இரு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

சிறுநீரக மாற்று சிகிச்சைகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு தனியாா் மருத்துவமனைகள் மீது மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்ச... மேலும் பார்க்க

கொளத்தூரில் பெண் கொலை

சென்னை கொளத்தூரில் வீட்டில் பெண் மா்மமான இறந்த நிலையில், பிரேத பரிசோதனையில் கொலை என உறுதியானது என்று போலீஸாா் தெரிவித்தனா். கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் கணேசமூா்த்தி. லாரி ... மேலும் பார்க்க

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படும் முழு உடல் பரிசோதனை மையத்தில் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான டைட்டானியம் பரிசோதனைத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஓமந்தூராா் பல்நோக்கு... மேலும் பார்க்க