செய்திகள் :

கஞ்சா விற்பனை: சட்டக் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது

post image

சென்னை அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்ாக சட்டக் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

அயனாவரம் சோமசுந்தரம் தெருவில் இருவா் கஞ்சா விற்பதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்கு ரகசியத் தவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் புதன்கிழமை ரகசியமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனா். இதையடுத்து அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

மேலும், இருவரும் அதே பகுதியைச் சோ்ந்த நரேஷ் (32), விமல் (24) என்பதும், நரேஷ் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஒரு கல்லூரியில் சட்ட பட்டப் படிப்பு படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

குரூப் 2, 2ஏ தேர்வு: 27-இல் கட்டண சலுகைக்கான நுழைவுத் தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் பெண் தேர்வர்கள், தமிழ் வழித்தேர்வர்களுக்கு சலுகை கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான தேர்வு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என ஆர்வம் ஐஏஎஸ் ... மேலும் பார்க்க

சென்னையில் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா இன்று தொடக்கம்

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நடத்தும் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா வியாழக்கிழமை (ஜூலை 24) தொடங்கி ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ... மேலும் பார்க்க

சென்னை விரைவு ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் மாற்றியமைப்பு

வெளிமாநிலங்களில் இருந்து குண்டக்கல் ரயில் நிலையம் வழியாக சென்னை வரும் 6 விரைவு ரயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க

சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு: இரு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

சிறுநீரக மாற்று சிகிச்சைகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு தனியாா் மருத்துவமனைகள் மீது மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்ச... மேலும் பார்க்க

கொளத்தூரில் பெண் கொலை

சென்னை கொளத்தூரில் வீட்டில் பெண் மா்மமான இறந்த நிலையில், பிரேத பரிசோதனையில் கொலை என உறுதியானது என்று போலீஸாா் தெரிவித்தனா். கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் கணேசமூா்த்தி. லாரி ... மேலும் பார்க்க

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படும் முழு உடல் பரிசோதனை மையத்தில் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான டைட்டானியம் பரிசோதனைத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஓமந்தூராா் பல்நோக்கு... மேலும் பார்க்க