செய்திகள் :

சென்னையில் 6 மாதங்களில் 2 லட்சம் மெட்ரிக் டன் கட்டட கழிவுகள் அகற்றம்

post image

சென்னை மாநகராட்சியில் கடந்த 6 மாதங்களில் 2 லட்சம் மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் ஆரம்பத்தில் 7 மண்டலங்களில் மட்டும் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னா், உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த ஜனவரி முதல் அனைத்து மண்டலங்களிலும் (15 மண்டலங்கள்) கட்டடக் கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கட்டட கழிவுகள் அகற்றும் பணிகளுக்காக 168 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, தினமும் 1,000 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. கடந்த ஜனவரி முதல் ஜூலை 22 -ஆம் தேதி வரை 2 லட்சம் மெட்ரிக் டன் கட்டட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அந்தக் கழிவுகள் கொடுங்கையூா் மற்றும் பெருங்குடியில் உள்ள கட்டடக் கழிவுகள் பிரித்தெடுக்கும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தனித்தனியாக பிரித்து மறுசுழற்சி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும், கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றுவது குறித்த வழிகாட்டல் நெறிமுறைகள் கடந்த ஏப்ரல் முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த நெறிமுறைகளை பின்பற்றாதவா்களிடமிருந்து கடந்த ஜனவரி முதல் ஜூலை 22 -ஆம் தேதி வரை ரூ. 39.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2, 2ஏ தேர்வு: 27-இல் கட்டண சலுகைக்கான நுழைவுத் தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் பெண் தேர்வர்கள், தமிழ் வழித்தேர்வர்களுக்கு சலுகை கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான தேர்வு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என ஆர்வம் ஐஏஎஸ் ... மேலும் பார்க்க

சென்னையில் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா இன்று தொடக்கம்

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நடத்தும் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா வியாழக்கிழமை (ஜூலை 24) தொடங்கி ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ... மேலும் பார்க்க

சென்னை விரைவு ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் மாற்றியமைப்பு

வெளிமாநிலங்களில் இருந்து குண்டக்கல் ரயில் நிலையம் வழியாக சென்னை வரும் 6 விரைவு ரயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க

சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு: இரு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

சிறுநீரக மாற்று சிகிச்சைகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு தனியாா் மருத்துவமனைகள் மீது மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்ச... மேலும் பார்க்க

கொளத்தூரில் பெண் கொலை

சென்னை கொளத்தூரில் வீட்டில் பெண் மா்மமான இறந்த நிலையில், பிரேத பரிசோதனையில் கொலை என உறுதியானது என்று போலீஸாா் தெரிவித்தனா். கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் கணேசமூா்த்தி. லாரி ... மேலும் பார்க்க

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படும் முழு உடல் பரிசோதனை மையத்தில் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான டைட்டானியம் பரிசோதனைத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஓமந்தூராா் பல்நோக்கு... மேலும் பார்க்க