செய்திகள் :

காஸா தேவாலயம் தற்செயலாகத் தாக்கப்பட்டது: இஸ்ரேல்!

post image

காஸா நகரத்திலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது தற்செயலாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

காஸாவிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த, ‘ஹோலி ஃபேமிலி’ எனும் தேவாலயத்தின் மீது கடந்த வாரம் இஸ்ரேல் ராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் தாக்குதல்களில் இருந்து உயிர்பிழைத்து, கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சுமார் 600-க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்திருந்த அந்தத் தேவாலயத்தின் மீதான தாக்குதலில், 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில், 10 பேர் படுகாயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், தேவாலயத்தின் கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது. இதையடுத்து, இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு போப் பதினான்காம் லியோ உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட உள் விசாரணையில், வெடிப் பொருள்களைத் தவறாகப் பயன்படுத்தியதனால், தேவாலயத்தின் மீது தற்செயலாகவே தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் இன்று (ஜூலை 23) தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தத் தாக்குதலுக்குப் பின், வாடிகனின் முக்கிய தலைவர்கள் காஸா தேவாலயத்துக்குச் சென்று பாதிப்புகளைப் பார்வையிட்டனர். அப்போது, இஸ்ரேலின் தாக்குதல்களில் காஸா முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளது என அவர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: துருக்கியில்.. ரஷியா - உக்ரைன் இடையில் 3-ம் சுற்று அமைதிப்பேச்சு!

The Israeli military said it had accidentally struck the only Catholic church in Gaza City.

இராக் தீ விபத்தில் 60 பேர் பலியான விவகாரம்: ஆளுநர் பதவி விலகல்!

இராக் நாட்டின், வாசிட் மாகாணத்தில் இருந்த வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக, அம்மாகாண ஆளுநர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.வாசிட் மாகாணத்தின் குட் நகரத்தில், புதியதாக திறக்கப்பட்ட வண... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 234 ஆக உயர்வு!

பாகிஸ்தான் நாட்டைப் புரட்டியெடுத்த கனமழையால் மற்றும் வெள்ளத்தால் பலியானோரது எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்து... மேலும் பார்க்க

அமெரிக்கா: இசைக் கச்சேரியால் வலிப்பு? 8 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்கா நாட்டில், ஒரு தேவாலயத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் பங்கேற்ற 8 குழந்தைகள், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹார்வர்டு பல்... மேலும் பார்க்க

வட அயர்லாந்தில் துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி.. 2 பேர் படுகாயம்!

பிரிட்டனின் வடக்கு அயர்லாந்தில், நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில், 2 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு அயர்லாந்தின், மெகுவயர்ஸ்பிரிட்ஜ் எனும் கிராமத்தில், இன்று (ஜூலை 23) காலை 8 ... மேலும் பார்க்க

துருக்கியில்.. ரஷியா - உக்ரைன் இடையில் 3-ம் சுற்று அமைதிப்பேச்சு!

துருக்கி நாட்டில் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையில், 3-ம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில், கடந்த 2022-ம்... மேலும் பார்க்க

இலங்கையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

இலங்கை பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் அருணா ஜெயசேகராவை, நேரில் சந்தித்து பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் சையது ஆமெர் ரெஸா உரையாடியுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் சையத... மேலும் பார்க்க