செய்திகள் :

துருக்கியில்.. ரஷியா - உக்ரைன் இடையில் 3-ம் சுற்று அமைதிப்பேச்சு!

post image

துருக்கி நாட்டில் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையில், 3-ம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில், கடந்த 2022-ம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகின்றது. இந்தப் போரில், இருதரப்பும் ஏராளமான உயிர் மற்றும் பொருள் சேதங்களைச் சந்தித்துள்ளன.

இந்நிலையில், சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரை நிறுத்த ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளின் முக்கிய அதிகாரிகள் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் 3-ம் சுற்று இன்று (ஜூலை 23) மாலை துவங்குவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு, மாஸ்கோவில் இருந்து வருகைத் தரும் குழுவுக்கு, ரஷிய அதிபரின் உதவியாளர் விளாதிமீர் மெடின்ஸ்கி தலைமைத் தாங்குகிறார். இதேபோல், உக்ரைன் நாட்டு குழுவுக்கு, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவ் தலைமைத் தாங்குகிறார்.

கடந்த மே 16 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில், இருநாட்டு அதிகாரிகள் மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மூலம், இருதரப்பும் தாங்கள் சிறைப்பிடித்த பிணைக் கைதிகளை விடுவித்தனர்.

முன்னதாக, உடனடியாக இருதரப்புக்கும் இடையில் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென, போப் பதினான்காம் லியோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய தயார் என அறிவித்த போப் பதினான்காம் லியோ, ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் வாடிகன் நகரத்துக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இலங்கையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

A third round of peace talks between Russian and Ukrainian officials are reportedly taking place in Turkey.

இராக் தீ விபத்தில் 60 பேர் பலியான விவகாரம்: ஆளுநர் பதவி விலகல்!

இராக் நாட்டின், வாசிட் மாகாணத்தில் இருந்த வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக, அம்மாகாண ஆளுநர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.வாசிட் மாகாணத்தின் குட் நகரத்தில், புதியதாக திறக்கப்பட்ட வண... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 234 ஆக உயர்வு!

பாகிஸ்தான் நாட்டைப் புரட்டியெடுத்த கனமழையால் மற்றும் வெள்ளத்தால் பலியானோரது எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்து... மேலும் பார்க்க

அமெரிக்கா: இசைக் கச்சேரியால் வலிப்பு? 8 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்கா நாட்டில், ஒரு தேவாலயத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் பங்கேற்ற 8 குழந்தைகள், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹார்வர்டு பல்... மேலும் பார்க்க

வட அயர்லாந்தில் துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி.. 2 பேர் படுகாயம்!

பிரிட்டனின் வடக்கு அயர்லாந்தில், நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில், 2 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு அயர்லாந்தின், மெகுவயர்ஸ்பிரிட்ஜ் எனும் கிராமத்தில், இன்று (ஜூலை 23) காலை 8 ... மேலும் பார்க்க

காஸா தேவாலயம் தற்செயலாகத் தாக்கப்பட்டது: இஸ்ரேல்!

காஸா நகரத்திலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது தற்செயலாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. காஸாவிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த, ‘ஹோலி ஃபேமிலி’ எனும் தேவாலயத... மேலும் பார்க்க

இலங்கையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

இலங்கை பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் அருணா ஜெயசேகராவை, நேரில் சந்தித்து பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் சையது ஆமெர் ரெஸா உரையாடியுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் சையத... மேலும் பார்க்க