செய்திகள் :

இலங்கையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

post image

இலங்கை பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் அருணா ஜெயசேகராவை, நேரில் சந்தித்து பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் சையது ஆமெர் ரெஸா உரையாடியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் சையது ஆமிர் ரெஸா, அரசு முறைப் பயணமாக, இலங்கைக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்புகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெனரல் சையது ஆமிர் ரெஸா, நேற்று (ஜூலை 22), இலங்கையின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் அருணா ஜெயசேகராவை, நேரில் சந்தித்து உரையாடினார்.

அப்போது, பாதுகாப்புத் துறையின் திறன்மேம்பாடு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன், இயற்கை பேரிடர் காலங்களில் இருதரப்புக்கும் இடையிலான தயார்நிலைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இருநாட்டு அதிகாரிகளும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பானது கடந்த ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் இலங்கை அதிகாரிகளுடன் நடைபெற்ற பாதுகாப்புத் துறை பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சி எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை! பரிசோதனையில் வெற்றி

இராக் தீ விபத்தில் 60 பேர் பலியான விவகாரம்: ஆளுநர் பதவி விலகல்!

இராக் நாட்டின், வாசிட் மாகாணத்தில் இருந்த வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக, அம்மாகாண ஆளுநர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.வாசிட் மாகாணத்தின் குட் நகரத்தில், புதியதாக திறக்கப்பட்ட வண... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 234 ஆக உயர்வு!

பாகிஸ்தான் நாட்டைப் புரட்டியெடுத்த கனமழையால் மற்றும் வெள்ளத்தால் பலியானோரது எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்து... மேலும் பார்க்க

அமெரிக்கா: இசைக் கச்சேரியால் வலிப்பு? 8 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்கா நாட்டில், ஒரு தேவாலயத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் பங்கேற்ற 8 குழந்தைகள், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹார்வர்டு பல்... மேலும் பார்க்க

வட அயர்லாந்தில் துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி.. 2 பேர் படுகாயம்!

பிரிட்டனின் வடக்கு அயர்லாந்தில், நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில், 2 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு அயர்லாந்தின், மெகுவயர்ஸ்பிரிட்ஜ் எனும் கிராமத்தில், இன்று (ஜூலை 23) காலை 8 ... மேலும் பார்க்க

காஸா தேவாலயம் தற்செயலாகத் தாக்கப்பட்டது: இஸ்ரேல்!

காஸா நகரத்திலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது தற்செயலாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. காஸாவிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த, ‘ஹோலி ஃபேமிலி’ எனும் தேவாலயத... மேலும் பார்க்க

துருக்கியில்.. ரஷியா - உக்ரைன் இடையில் 3-ம் சுற்று அமைதிப்பேச்சு!

துருக்கி நாட்டில் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையில், 3-ம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில், கடந்த 2022-ம்... மேலும் பார்க்க