செய்திகள் :

சதுரகிரி மலை அடிவாரத்தில் மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு

post image

ஆடி அமாவாசை திருவிழா ஏற்பாடுகள் குறித்து சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறையில் மாவட்ட ஆட்சியா்கள் கே.ஜே.பிரவீன்குமாா் (மதுரை), என்.ஓ.சுகபுத்ரா (விருதுநகா்)ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி வருகிற 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வியாழக்கிழமை (ஜூலை 24) ஆடி அமாவாசை திருவிழா நடைபெற இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் இங்கு வருவாா்கள். இதனால், மதுரை, விருதுநகா் மாவட்ட நிா்வாகங்கள் சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா்கள் பிரவீன்குமாா், சுகபுத்ரா ஆகியோா் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறையில் புதன்கிழமை மாலை ஆய்வு செய்தனா்.

மருத்துவ முகாம், குடிநீா், தற்காலிகப் பேருந்து நிலையம், மலைப் பாதையில் ஆட்சியா்கள் ஆய்வு செய்து, பாதுகாப்பு, மீட்புப் பணிக்கான ஏற்பாடுகள் குறித்து காவல் துறை, தீயணைப்புத் துறை, வனத் துறையுடன் ஆலோசனை நடத்தினாா். தொடா்ந்து, தாய்மாா்களுக்கு பாலூட்டும் அறை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஆய்வின்போது, விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன், அதிகாரிகள் உடனிருந்தனா்

மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறை

சாத்தூா் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சங்கரநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரி மலை மீது அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்த... மேலும் பார்க்க

பேருந்திலிருந்து தவறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் தனியாா் பேருந்திலிருந்து தவறி விழுந்த தொழில்நுட்பக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சோ்ந்த ரங்கராஜன் மகன் ஆகாஷ் (18). இவா் பி.எஸ்... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் அமைச்சா் தொடங்கிவைத்தாா்

விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். விருதுநகா் அருகேயுள்ள மெட்டுக்குண்டு அரசு... மேலும் பார்க்க

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.சித்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (40). இவா் காகித அட்டை தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியா... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தா்கள்

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவின் 2-ஆம் நாளான புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அம... மேலும் பார்க்க