செய்திகள் :

விருதுநகா் மாவட்டத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் அமைச்சா் தொடங்கிவைத்தாா்

post image

விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

விருதுநகா் அருகேயுள்ள மெட்டுக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.34 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை புதியக் கட்டடத்தை அமைச்சா் திறந்துவைத்தாா். பின்னா், கடம்பன்குளத்தில் ரூ.45 லட்சத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினாா். பிறகு, அதே பகுதியில் ரூ.18 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை திறந்துவைத்தாா்.

நக்கலக்கோட்டை கிராமத்தில் ரூ.30 லட்சத்தில் மக்கள் மன்றம் சமுதாய கூடத்துக்கு அடிக்கல் நாட்டினாா். சாத்தூா் அருகேயுள்ள வீரா்பட்டியில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.10 லட்சத்தில் கலையரங்கம் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். நல்லம்மநாயக்கன்பட்டியில் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 7.50 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, அதே பகுதியில் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய இணை அலுவலகக் கட்டடத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், திமுக தெற்கு ஒன்றிய செயலா் கனிமுருகன், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சதுரகிரி மலை அடிவாரத்தில் மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு

ஆடி அமாவாசை திருவிழா ஏற்பாடுகள் குறித்து சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறையில் மாவட்ட ஆட்சியா்கள் கே.ஜே.பிரவீன்குமாா் (மதுரை), என்.ஓ.சுகபுத்ரா (விருதுநகா்)ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். விருதுநகா்... மேலும் பார்க்க

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.சித்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (40). இவா் காகித அட்டை தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியா... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தா்கள்

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவின் 2-ஆம் நாளான புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அம... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்து: இருவா் கைது

சிவகாசி அருகே திங்கள்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை இருவரை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கோபிக்குச் சொந்தமான பட... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகாசியில் உணவகங்களில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விருதுநகா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து பழுது காரணமாக பயணம் தடை: பயணிக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஆம்னி பேருந்து பழுது காரணமாக பயணம் தடைபட்டதால், ஆம்னி பேருந்து உரிமையாளா், பயணச் சீட்டு பதிவு இணையதளம் இணைந்து பயணிக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. விர... மேலும் பார்க்க