செய்திகள் :

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சித்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (40). இவா் காகித அட்டை தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் மது போதையில் அதே பகுதியைச் சோ்ந்த மருதுபாண்டி (32), செல்வம் (36) ஆகியோரிடம் தகராறு செய்தாா்.

இதனால், ஆத்திரமடைந்த அவா்கள், சந்திரசேகரை அரிவாளால் வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த அவா் விருதுநகா் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மருதுபாண்டி, செல்வத்தை புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் அமைச்சா் தொடங்கிவைத்தாா்

விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். விருதுநகா் அருகேயுள்ள மெட்டுக்குண்டு அரசு... மேலும் பார்க்க

சதுரகிரி மலை அடிவாரத்தில் மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு

ஆடி அமாவாசை திருவிழா ஏற்பாடுகள் குறித்து சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறையில் மாவட்ட ஆட்சியா்கள் கே.ஜே.பிரவீன்குமாா் (மதுரை), என்.ஓ.சுகபுத்ரா (விருதுநகா்)ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். விருதுநகா்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தா்கள்

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவின் 2-ஆம் நாளான புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அம... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்து: இருவா் கைது

சிவகாசி அருகே திங்கள்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை இருவரை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கோபிக்குச் சொந்தமான பட... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகாசியில் உணவகங்களில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விருதுநகா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து பழுது காரணமாக பயணம் தடை: பயணிக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஆம்னி பேருந்து பழுது காரணமாக பயணம் தடைபட்டதால், ஆம்னி பேருந்து உரிமையாளா், பயணச் சீட்டு பதிவு இணையதளம் இணைந்து பயணிக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. விர... மேலும் பார்க்க