செய்திகள் :

சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய தற்காலிக தடை'

post image

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் கந்து வட்டிக்கு கடன் வாங்கிய ஏழை கூலி தொழிலாளிகளை குறிவைத்து தி.மு.க-வைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்று பேரம் பேசி சிறுநீரகங்களை திருடியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, ஆனந்தன் தலைமறைவானார்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ஒருவர், பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுரி மருத்துவமனை, திருச்சியில் உள்ள சிதார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு இந்த சிறுநீரங்கள் பொருத்தப்பட்டதாக கூற, பரபரப்பானது.

தலைமறைவான திமுக பிரமுகர் ஆனந்தன்
தலைமறைவான திமுக பிரமுகர் ஆனந்தன்

இந்நிலையில், விதிமுறைகளை மீறி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடப்பதாக வெளியான இந்த செய்திகள் குறித்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத்தை கடந்த 18 -ம் தேதி நியமித்ததாக தமிழ்நாடு அரசு விளக்கம் தந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து வினீத் தலைமையிலான அதிகாரிகள் குழு, புகார்கள் எழுந்த பகுதிகளில் விரிவான விசாரணை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது. இவ்விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை அறிக்கையினை வினீத், அரசுக்கு அனுப்பியுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

அந்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், 'பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி சிதார் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுநீரக பாதிப்பு

பொதுமக்கள் நலன் கருதியம், மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின்படியும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இந்த ஆணையை பிறப்பித்துள்ளதாகவும் மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

சிறுநீரகம் திருட்டு விவகாரத்தில் 2 தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ள தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் லாக்கப் டெத்: அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதர்; எதிர்க்கும் சிபிஐ.. பின்னணி என்ன?

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுச்செய்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிபிஐ தரப்பில் எதிர்ப்பு ... மேலும் பார்க்க

கண்ணாடி துகள்; சீனா டிவைஸ்; 100 வழக்குகள் - சொகுசு கார் திருடனின் பகீர் பின்னணி!

சென்னை, அண்ணாநகர் மேற்கு, 16வது மெயின்ரோடு, கதிரவன் காலனியில் குடியிருந்து வருபவர் எத்திராஜ் ரத்தினம். இவர் கடந்த 10.06.2025-ம் தேதி தன்னுடைய Toyoto Fortuner காரை வீட்டின் எதிரில் நிறுத்தி வைத்திருந்த... மேலும் பார்க்க

திருச்சி: கோயில் திருவிழாவில் வாண வெடி வெடித்து குழந்தை பலி; தாய் படுகாயம்; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் திருப்பைஞ்ஞீலி ஊராட்சியில் உள்ள மூவராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன். இவர், கொத்தனாராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மனோகரி.இவர்களுக்குத்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: சகோதரர்கள் வெட்டி கொலை; கொலையாளிகளைத் தேடும் போலீஸ்; அறந்தாங்கியில் அதிர்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த காத்தமுத்து மகன்கள் கண்ணன் (வயது: 32) மற்றும் கார்த்தி (வயது: 28). இதில், கண்ணனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கார்த்தி... மேலும் பார்க்க