செய்திகள் :

திருச்சி: கோயில் திருவிழாவில் வாண வெடி வெடித்து குழந்தை பலி; தாய் படுகாயம்; என்ன நடந்தது?

post image

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் திருப்பைஞ்ஞீலி ஊராட்சியில் உள்ள மூவராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன். இவர், கொத்தனாராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மனோகரி.

இவர்களுக்குத் திருமணம் ஆகி இரண்டரை வயதில் ஹனிக்கா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள நல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் ஜூன் 10-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்றது.

child dead
child dead

இதில் 48 வது நாள் மண்டல பூஜை முன்னிட்டு நேற்று மதியம் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புனித நீர் எடுப்பதற்காக முக்கொம்பு பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் பூவரசன் மனைவி, மகள் இருவரும் சென்றுள்ளனர். 

அங்குக் கிராம மக்கள் குடங்களில் புனித நீர் எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராகினர். அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் வாணவெடி வெடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்படி, வெடிப்பதற்காக வானத்தை நோக்கி வீசப்பட்ட வெடி வெடிக்காமல் கீழ்நோக்கி வந்து பூவரசன் மனைவி மனோகரி தனது குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடந்து சென்றபோது மனோகரியின் வலது தோள்பட்டை மீது விழுந்து வெடித்துள்ளது. 

இதில், மனோகரிக்கு தோள்பட்டையிலும், அவரது மகள் ஹனிக்கா கழுத்துப் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக சிறுகாம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கிராம மக்கள் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சென்ற போது சிறுமி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவல் அறிந்த வாத்தலை காவல் நிலைய போலீஸார் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு உட்படுத்தி உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

people

தொடர்ந்து, சிறுமியின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக ஆம்புலன்ஸ் மூலம் கிராமத்திற்குக் கொண்டு சென்றபோது கிராம மக்கள் சிறுமியின் உடலைப் பார்த்துக் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கோயில் விழாவை முன்னிட்டு வெடி வெடித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

கும்மிடிப்பூண்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; வடமாநில நபர் கைது - குற்றவாளியை உறுதிபடுத்தியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 4-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் சந்தேகப்படும் நபரை நேற்று (ஜூலை 25) கைது செய்துள்ளது காவல்துறை. ஜூலை மாதம் 12-ம் தேதி, பள்ளிக்குச் செ... மேலும் பார்க்க

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் லாக்கப் டெத்: அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதர்; எதிர்க்கும் சிபிஐ.. பின்னணி என்ன?

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுச்செய்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிபிஐ தரப்பில் எதிர்ப்பு ... மேலும் பார்க்க

கண்ணாடி துகள்; சீனா டிவைஸ்; 100 வழக்குகள் - சொகுசு கார் திருடனின் பகீர் பின்னணி!

சென்னை, அண்ணாநகர் மேற்கு, 16வது மெயின்ரோடு, கதிரவன் காலனியில் குடியிருந்து வருபவர் எத்திராஜ் ரத்தினம். இவர் கடந்த 10.06.2025-ம் தேதி தன்னுடைய Toyoto Fortuner காரை வீட்டின் எதிரில் நிறுத்தி வைத்திருந்த... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: சகோதரர்கள் வெட்டி கொலை; கொலையாளிகளைத் தேடும் போலீஸ்; அறந்தாங்கியில் அதிர்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த காத்தமுத்து மகன்கள் கண்ணன் (வயது: 32) மற்றும் கார்த்தி (வயது: 28). இதில், கண்ணனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கார்த்தி... மேலும் பார்க்க