செய்திகள் :

``கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்.. மதுரைக்கு அவப்பெயரை தந்துள்ளது திமுக அரசு..'' - அதிமுக டாக்டர் சரவணன்

post image

தமிழ்நாட்டின் கலை, கலாச்சார தலைநகரமாக மதுரை விளங்குகிறது. அண்மையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட ஸ்வச் சர்வேக்ஷன் 2023 (Swachh Survekshan 2023) தூய்மைப் பட்டியலில் மதுரை மாநகரம் மதுரைக்கு 311-வது இடத்துக்கு தள்ளப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசியல் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மருத்துவர் அணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன், "மத்திய அரசின் வீடு மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலுள்ள தூய்மையான நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதிமுக ஆட்சியில் சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்கள் பல்வேறு விருதுகளை பெற்றன. 2017-ல் இந்தியாவிலுள்ள தூய்மையான 10 புனித தலங்களில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் முதல் இடம் பெற்றது. இரண்டாவது முறையாக 2019 ஆம் ஆண்டும் முதலிடம் வந்தது.

சட்டமன்றத் தேர்தலின்போது மதுரை மாவட்டத்திற்காக பல்வேறு வாக்குறுதிகளை திமுகவினர் கொடுத்தனர். ஆனால், ஒன்றையும் நிறைவேற்றவில்லை.

டாக்டர் சரவணன்

தற்போது 2024-2025 க்கான இந்தியாவின் தூய்மை நகரங்களின் பட்டியலில் மதுரை மாநகராட்சி கடைசி இடத்தில் வந்துள்ளது மக்களை வேதனைப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மதுரை மாநகராட்சியில்தான் ரூ.200 கோடிக்கு மேல் வரி முறைகேடும் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மொத்தத்தில் மதுரை மாநகராட்சி கமிஷன், கரப்ஷன், கலெக்சன் என்று சொல்லுமளவுக்கு உள்ளது. கோயில் மாநகரமான மதுரைக்கு அவப்பெயரை திமுக அரசு தந்துள்ளது. இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது" என்றார்.

``சோழர்கள் வளர்த்த காவித்தமிழ்; ஸ்டாலின் ஏன் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்?'' - தமிழிசை கேள்வி

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவிருக்கிறார். இன்றிரவு தூத்துக்குடி விமான நிலையம் வரவிருக்கும் அவரை வரவேற்க செல்கையில் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.கங்கைகொண்ட சோழப... மேலும் பார்க்க

கங்கை கொண்ட சோழபுரம்: பிரதமர் மோடி வருகை, இளையராஜா சிம்பொனி இசை.. களைகட்டும் திருவாதிரை விழா!

மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி தமிழக அரசு சார்பில் இராஜேந்திர சோழன் திருவாதிரை விழா கொ... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: ``ராகுல் காந்திபோல ஸ்டாலின் தவறை உணர்வாரா?'' - அன்புமணி கேள்வி

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பி... மேலும் பார்க்க

``காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது என் தவறுதான்'' - ராகுல் காந்தி சொல்வதென்ன?

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாதது தனது தவறுதான் என்றும் கட்சியின் தவறில்லை என்றும் கூறியுளார். மேலும், தற்போது சாதிவாரி கணக்க... மேலும் பார்க்க

Thailand vs Cambodia: இந்து கோவிலுக்கு உரிமை கொண்டாடுவதுதான் மோதலுக்கு காரணமா? | Explained

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே எழுந்துள்ள மோதலால் தென் கிழக்கு ஆசியாவில் போர்மேகம் சூழ்ந்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால எல்லைப் பிரச்னைகள் திடீரென மோதலாக வெடித்திருக்கிறத... மேலும் பார்க்க

Ear Health: காதில் ஏற்படும் பாதிப்புகளும், தீர்வுகளும்.. - விளக்கும் ENT சிறப்பு மருத்துவர்

ஐம்புலன்களில் ஒன்றான காது, கேட்பதற்கு மட்டுமல்ல... நம் உடலைச் சமநிலையில் வைத்திருப்பதற்கும் உதவுகிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காது குறித்த அக்கறையும் அதைப் பற்றிய அடிப்படைப் புரிதலும் இந... மேலும் பார்க்க