செய்திகள் :

நீதிபதி வா்மா பதவிநீக்க தீா்மானம் மக்களவையில் கொண்டு வரப்படும்: அமைச்சா் கிரண் ரிஜிஜு தகவல்

post image

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி வா்மாவை பதவி நீக்கம் செய்யும் தீா்மானம் மக்களவையில் அனுமதிக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.

முன்னதாக, மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் அளித்த இதுதொடா்பான நோட்டீஸ் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், இதே விவகாரம் தொடா்பாக மக்களவையில் ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 152 எம்.பி.க்கள் கையொப்பமிட்ட தீா்மானத்தை ஒருமனதாக அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சா் கிரண் ரிஜிஜு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், நீதிபதி வா்மாவை நீக்க அனைத்துக் கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன; இதற்கான தீா்மானம் மக்களவையில் கொண்டுவரப்பட்டு பின்னா் மாநிலங்களவையில் நீதிபதிகள் (விசாரணை) சட்டத்துடன் சோ்த்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றாா் ரிஜிஜு.

நீதிபதி வா்மாவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மூன்று நபா் குழுவை அமைக்க மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவிப்பாா் என்று கூறப்படுகிறது. இந்தக் குழுவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற வாய்ப்புள்ளது.

மாநிலங்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் 63 போ் கையொப்பமிட்ட பதவி நீக்க தீா்மானத்துக்கான நோட்டீஸ் அளிக்கப்பட்ட ஜூலை 21-ஆம் தேதியன்றே, மக்களவையில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சியினா் இந்த நோட்டீஸை சமா்ப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநிலங்களவையில் இந்த நோட்டீஸ் வரப்பெற்றுள்ளதாக அறிவித்த ஜூலை 21-ஆம் தேதி இரவு, குடியரசு துணைத் தலைவரும், அவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசர ஊர்தியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! எதிர்க்கட்சிகள் கண்டனம்

பிகார் மாநிலத்தில் அவசர ஊர்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பெண் ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடற்தகுதித் தேர்வுக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது 2025 வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறது.சன்சத் ரத்னா விருது 2025-க்கு தேர்வானவர்கள்: சுப்ரியா சுலேரவி கிஷன்நிஷிகாந்த் து... மேலும் பார்க்க

அவைத் தலைவரிடம் முதல் கோரிக்கை வைத்து திட்டு வாங்கியதைப் பகிர்ந்த கிரண் ரிஜிஜு

புது தில்லி: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தான் முதன் முதலில், அவைத் தலைவரை சந்தித்தபோது வைத்தக் கோரிக்கையும் அதனால் அவரிடம் திட்டு வாங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.தான் அரசியலில் ... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்: உதய்பூரில் பல் மருத்துவ மாணவி தற்கொலை!

உதய்பூர் அருகேயுள்ள டெபாரியில் பல் மருத்துவம் பயிலும் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை காவலரின் ஒரே மகள் ஸ்வேதா சிங்(25). இவர் ... மேலும் பார்க்க

ஊர்க்காவல்படைத் தேர்வின்போது மயங்கிய பெண்! ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை!!

பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில், ஊர்க்காவல் படைத் தேர்வின்போது மயங்கி விழுந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றியபோது, அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் எ... மேலும் பார்க்க

6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தகவல்

நாட்டில் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி அளித்த தரவுகளின்படி, 2018 ஆம் நிதியாண்டில் 47.5 கோடியாக இருந்த வேலைவ... மேலும் பார்க்க