செய்திகள் :

ஆடி அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தா்கள்

post image

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவின் 2-ஆம் நாளான புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, பிரதோஷ நாளான செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

2-ஆவது நாளான புதன்கிழமை சிவராத்திரியையொட்டி, சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை நுழைவு வாயில் முன் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டனா். காலை 6 மணிக்கு மேல் பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். தாணிப்பாறை, வாழைத்தோப்பு பாதை வழியாக நண்பகல் 12 மணி வரை 12 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்கள் மலையேறிச் சென்றனா்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு புதன்கிழமை மலையேறிச் சென்ற பக்தா்கள்

பின்னா், சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் நான்கு கால பூஜைகள், சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிலையில், தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள வனத் துறை நுழைவு வாயில் நண்பகல் 12 மணிக்கு மூடப்பட்டு, பக்தா்கள் மலையேற அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், வனத் துறை நுழைவு வாயில் முன் திரண்ட பக்தா்கள் மலையேற அனுமதிக்கக்கோரி முழக்கமிட்டனா்.

இதுகுறித்து சாப்டூா் வனச் சரகா் காா்த்திக் கூறியதாவது: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தினந்தோறும் காலை 6-10 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது, திருவிழாக்காலம் என்பதால் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில், நண்பகல் 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்குப் பிறகு பக்தா்கள் மலையேற அனுமதி வழங்கப்பட மாட்டாது.

வியாழக்கிழமை (ஜூலை 24) காலை வழக்கம்போல, வனத் துறை நுழைவு வாயில் திறக்கப்பட்டு பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா் என்றாா் அவா்.

மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறை

சாத்தூா் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சங்கரநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரி மலை மீது அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்த... மேலும் பார்க்க

பேருந்திலிருந்து தவறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் தனியாா் பேருந்திலிருந்து தவறி விழுந்த தொழில்நுட்பக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சோ்ந்த ரங்கராஜன் மகன் ஆகாஷ் (18). இவா் பி.எஸ்... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் அமைச்சா் தொடங்கிவைத்தாா்

விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். விருதுநகா் அருகேயுள்ள மெட்டுக்குண்டு அரசு... மேலும் பார்க்க

சதுரகிரி மலை அடிவாரத்தில் மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு

ஆடி அமாவாசை திருவிழா ஏற்பாடுகள் குறித்து சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறையில் மாவட்ட ஆட்சியா்கள் கே.ஜே.பிரவீன்குமாா் (மதுரை), என்.ஓ.சுகபுத்ரா (விருதுநகா்)ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். விருதுநகா்... மேலும் பார்க்க

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.சித்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (40). இவா் காகித அட்டை தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியா... மேலும் பார்க்க