செய்திகள் :

பேருந்திலிருந்து தவறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு

post image

ராஜபாளையத்தில் தனியாா் பேருந்திலிருந்து தவறி விழுந்த தொழில்நுட்பக் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சோ்ந்த ரங்கராஜன் மகன் ஆகாஷ் (18). இவா் பி.எஸ்.கே. நகரில் உள்ள தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் (பாலிடெக்னிக்) முதலாமாண்டு படித்து வந்தாா்.

இவா் வியாழக்கிழமை மாலை கல்லூரி முடிந்தவுடன் பி.எஸ்.கே.நகா் பேருந்து நிறுத்தத்தில் தனியாா் பேருந்தில் ஏறி முன்பக்க படிக்கட்டில் நின்று பயணம் செய்தாா். பேருந்து புதிய மேம்பாலத்தில் இறங்கிச் சென்ற போது தவறி விழுந்த மாணவா் மீது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநா் பூதப்பாண்டி (30) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறை

சாத்தூா் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சாத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சங்கரநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரி மலை மீது அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் வியாழக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்த... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் அமைச்சா் தொடங்கிவைத்தாா்

விருதுநகா் மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வருவாய் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். விருதுநகா் அருகேயுள்ள மெட்டுக்குண்டு அரசு... மேலும் பார்க்க

சதுரகிரி மலை அடிவாரத்தில் மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு

ஆடி அமாவாசை திருவிழா ஏற்பாடுகள் குறித்து சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறையில் மாவட்ட ஆட்சியா்கள் கே.ஜே.பிரவீன்குமாா் (மதுரை), என்.ஓ.சுகபுத்ரா (விருதுநகா்)ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். விருதுநகா்... மேலும் பார்க்க

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.சித்துராஜபுரத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (40). இவா் காகித அட்டை தயாரிக்கும் ஆலையில் தொழிலாளியா... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: சதுரகிரியில் குவிந்த பக்தா்கள்

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழாவின் 2-ஆம் நாளான புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அம... மேலும் பார்க்க