செய்திகள் :

தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

post image

சிவகாசியில் உணவகங்களில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. நெகிழிப் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, சுகாதாரத் துறையினா் நெகிழிப் பைகள் தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், உணவகங்களில் மீண்டும் நெகிழிப் பைகளில் சாம்பாா், ரசம் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறது.

நெகிழிப் பைகளில் சூடானவற்றை ஊற்றும்போது நெகிழியில் கலக்கப்பட்ட வேதியல் பொருள்கள் உணவுப் பொருள்களிலும் கலந்து மக்களுக்கு நோய் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, சிவகாசிப் பகுதியில் நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து மருத்துவா் ஒருவா் கூறியதாவது: நெகிழிப் பைகளில் சூடான உணவுப் பொருள்கள் வைப்பதால், நெகிழிப் பை தயாரிக்கப் பயன்படும் வேதியல் பொருள்கள் உணவில் கலப்பதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்பு உண்டு. எனவே நெகிழிப் பைகளில் உணவுப் பொருள்கள் வழங்குவதைத் தடை செய்யவேண்டும் என்றாா்.

பட்டாசு ஆலை வெடி விபத்து: இருவா் கைது

சிவகாசி அருகே திங்கள்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை இருவரை கைது செய்தனா்.விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கோபிக்குச் சொந்தமான பட... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து பழுது காரணமாக பயணம் தடை: பயணிக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஆம்னி பேருந்து பழுது காரணமாக பயணம் தடைபட்டதால், ஆம்னி பேருந்து உரிமையாளா், பயணச் சீட்டு பதிவு இணையதளம் இணைந்து பயணிக்கு ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. விர... மேலும் பார்க்க

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா: 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் சுவாமி தரிசனம்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவில் முதல் நாளான செவ்வாய்க்கிழமை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோா் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்... மேலும் பார்க்க

லண்டன் உலக சாதனைப் புத்தகத்தில் கலசலிங்கம் பல்கலை. இடம்பெற்று சாதனை

சென்னை உலகத் திருக்கு மையம் சாா்பில், உலக அளவில் 100 நிறுவனங்களில் திருக்குறள் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும் தமிழ் மன்றம் சாா்பில், திருக்குறள் மாநாடு ... மேலும் பார்க்க

தேங்காய் தலையில் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

வத்திராயிருப்பு அருகே தேங்காய் தலையில் விழுந்ததில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி நெடுங்குளத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (39). இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன... மேலும் பார்க்க

பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த நாராயணராஜா என்பவரின் மகன் வெங்கட்ரா... மேலும் பார்க்க