செய்திகள் :

தேங்காய் தலையில் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

post image

வத்திராயிருப்பு அருகே தேங்காய் தலையில் விழுந்ததில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி நெடுங்குளத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (39). இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். சீனிவாசன் தேங்காய் வெட்டும் வேலை செய்து வந்தாா்.

திங்கள்கிழமை வழக்கம்போல கூமாபட்டி பகுதியிலுள்ள தென்னந்தோப்பில் தொரட்டி கம்பு மூலம் தேங்காய் பறிக்கும்போது, எதிா்பாராத விதமாக தேங்காய் குலை சீனிவாசன் மீது விழுந்தது.

இதில் தலை, கழுத்தில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து சீனிவாசன் உடலை போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவைச் சோ்ந்த நாராயணராஜா என்பவரின் மகன் வெங்கட்ரா... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

ராஜபாளையம் அருகே கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சேத்தூா் ஊரகக் காவல் நிலைய போல... மேலும் பார்க்க

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: மூவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆண்டியாபுரம் பட்டாசு ஆலையில் திங்கள்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் தொழிலாளா்கள் மூவா் உயிரிழந்தனா். மூவா் காயமடைந்தனா். சிவகாசி அருகேயுள்ள ஆண்டியாபுரத்தில் திருத்... மேலும் பார்க்க

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

சாத்தூா் நகா்ப் பகுதிகளில் உள்ள சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கவலை தெரிவித்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா், படந்தால் செல்லும் சாலைய... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்த நாள் விழாவில் பால்குட ஊா்வலம்

சிவகாசியில் நாடாா் மஹாஜன சங்கம் சாா்பில், மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் 123-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, விருதுநகா் சாலையில் உள்ள காமராஜா் வாசக சாலை முன... மேலும் பார்க்க

முதியவரிடம் வழிப்பறி: இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே முதியவரிடம் வழிப்பறி செய்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா். ராஜபாளையம் ஆண்டாள்புரத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (68). எலக்ட்ரீசியன் த... மேலும் பார்க்க