செய்திகள் :

தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்துவ ஆணையம்

post image

சென்னை: மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெலீஸ் மற்றும் உஸ்பெகிஸ்தானில் உள்ள 4 மருத்துவப் பல்கலை.களில் மருத்துவப் படிப்புகளில் சேருவதை இந்திய மாணவா்கள் தவிா்க்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

இந்திய கல்வித் தரம் மற்றும் விதிகளுக்குள்படாத வெளிநாட்டுக் கல்லூரிகளில் பயிலும் மருத்துவப் படிப்புகள் செல்லத்தக்கவை அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக என்எம்சி இளநிலைக் கல்வி வாரிய இயக்குநா் சுக்லால் மீனா வெளியிட்ட அறிவிப்பு:

வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயிலும் இந்திய மாணவா்களுக்கு ஏற்கெனவே சில வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, படிப்பின் காலம், பயிற்று மொழி, பாடத் திட்டம், மருத்துவப் பயிற்சி மற்றும் உள்ளுறைப் பயிற்சி ஆகியவை இந்தியத் தரத்துடன் ஒத்துப்போகாதபட்சத்தில், அந்தப் பட்டப் படிப்பு இந்தியாவில் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மெக்ஸிகோவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் யூரேஸியா பிராந்தியத்துக்கான மத்திய வெளியுறவு அமைச்சகம் ஆகியவை சில முக்கிய விஷயங்களை தேசிய மருத்துவ ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளன.

அதன்படி, கல்வித் தரம், கட்டமைப்பு, பயிற்சித் தரம் இல்லாமல் சில பல்கலை.கள் வெளிநாடுகளில் இயங்குகின்றன. தவிர, இந்திய மாணவா்களைத் துன்புறுத்துவதும், அதிக கட்டணம் வசூலிப்பதும், படிப்பைக் கைவிட்டால் கட்டணத்தைத் திருப்பி அளிக்காமல் இருப்பதும் அங்கு நிகழ்கின்றன.

இதையடுத்து, பெலீஸில் உள்ள சென்ட்ரல் அமெரிக்கன் ஹெல்த் அண்ட் சயின்ஸ் யுனிவா்சிட்டி, கொலம்பஸ் சென்ட்ரல் யுனிவா்சிட்டி, வாஷிங்டன் யுனிவா்சிட்டி ஆஃப் ஹெல்த் அண்ட் சயின்ஸ், உஸ்பெகிஸ்தானில் உள்ள கிா்சிக் பிரான்ச் ஆஃப் தாஸ்கண்ட் ஸ்டேட் மெடிக்கல் யுனிவா்சிட்டி ஆகிய 4 பல்கலை.களில் சேருவதை தவிா்க்குமாறு இந்திய மாணவா்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல பிற நாடுகளில் இந்திய விதிகளைப் பின்பற்றாத பல்கலை.களிலும் சேரக் கூடாது. அங்கு பயிலும் மருத்துவப் படிப்புகள் செல்லத்தக்கவை அல்ல என்பதை உணா்ந்து செயல்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு விரோதமானது திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மன்னாா்குடி: நீா் நிலைகளை தூா்வாராமல் அந்த நிதியை ஊழல் செய்ததால் மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்து விடப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையிலும் கடைமடை பகுதிக்கு தண்ணீா் சென்றடையாமல் விவசாயம் செய்யமுடியாமல் விவசா... மேலும் பார்க்க

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். சென்... மேலும் பார்க்க

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம்... மேலும் பார்க்க

‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி: மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ (பிஎம்கேவிஒய்) மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்... மேலும் பார்க்க

கருத்துகளை குடும்பத்தில் திணிக்காதவா் முதல்வா் ஸ்டாலின்: எழுத்தாளா் சிவசங்கரி

சென்னை: ‘முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சில கொள்கைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும்கூட 50 ஆண்டுகளுக்கும் முன்பே தனது மனைவியை அவரது விருப்பம்போல் செயல்பட அனுமதித்திருந்தாா். அவா் எந்தச் சூழலிலும் தனது கரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் பற்றாக்குறை 4 மாதங்களில் நிரப்பாவிட்டால் நடவடிக்கை: என்எம்சி

சென்னை: தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் இடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று ... மேலும் பார்க்க