செய்திகள் :

``அதிமுக -பாஜக கூட்டணியில் விஜய், சீமான் இணையலாம்; ஆனால்..'' - பாஜக ராம சீனிவாசன் சொல்வதென்ன?

post image

திண்டுக்கல், நத்தம் சாலையில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, "திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டியில் இரு தரப்பினரிடையே கடந்த 22 ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வருகிறது. இன்றைய பிரச்னையில் வழக்கு பதிவு செய்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை. ஆத்தூர் அமைச்சர் ஐ.பெரியசாமி இரு தரப்பினரையும் அழைத்து பேசியிருக்கலாம். ஆனால் இதுவரை செய்யாதது ஏன்?  விரைவில் இதற்கு சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும்.

அதிமுக - பாஜக கூட்டணி

அதிமுக - பாஜக கூட்டணியை சிலர் எதிர்பார்க்கவில்லை. இந்த கூட்டணி அமைவதற்கு முன் 200 தொகுதிகளில் திமுக வெற்றிப் பெறும் என முழக்கமிட்டனர். தற்போது அதனை தவிர்த்து விட்டனர். இதனால், அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட வேண்டும் என திமுக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.  

பாஜக உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமியும் தலைவர்களாக உள்ளனர். கூட்டணி ஆட்சியா, தனித்து ஆட்சியா, வெளியில் இருந்து ஆதரவா என்பதையெல்லாம், தேர்தலுக்கு பின் விவாதிக்க வேண்டும். தற்போது பேச வேண்டியதில்லை. அவர்கள் இருவர் சொல்வதை இரு கட்சியினரும் ஏற்றுக் கொள்வோம். 

`நாங்கள் ஏமாளிகள் அல்ல' என எடப்பாடி பழனிச்சாமி . அவர்களின் தொண்டர்களுக்காக கூறியுள்ளார். அதிமுக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி, எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. திமுகவிற்கு எதிராக ஓட்டு சிதற கூடாது என்பதற்காக திமுகவிற்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளையும் கூட்டணிக்கு அழைக்கிறோம்.

விஜய், சீமான் ஆகியோரை வரவேற்கிறோம்..

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சியான த.வெ.க கூட இணையலாம். ஆனால், விஜய், எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்றுக் கொள்வாரா? என்று தெரியவில்லை. நடிகர் விஜய், சீமான் ஆகியோரை இந்த கூட்டணிக்கு வரவேற்கிறோம்.

திமுக வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு செயல்பட வேண்டும். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாகிவிட்டனர். அதிமுக திசை மாறிச் செல்கிறது என முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவின் முடிவு எங்கிருந்தோ எடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் அதிமுக - பாஜக இருவரும் இணைந்து ஓட்டு வாங்கிய போது எங்கே சென்றார். அவருக்கு எங்கிருந்து உத்தரவு வந்ததோ தெரியவில்லை. அதனை அவர் செயல்படுத்துகிறார்" என தெரிவித்தார்.

``திமுக `பாடி போன லாரி, டயர் போன பேருந்து' வண்டி ஓடாது..'' - ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

ராஜபாளையத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 7 அன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ``இந்தியை திணித்தால் பள்ளியை இழுத்து மூடுவோம்..'' - ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறி வருகிறார். இந்தி பேசுபவர்களை அவரது கட்சியினர் அடித்து உதைத்து வருகி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நகராட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானம்; உமா மகேஸ்வரி மீண்டும் தோல்வி.. பின்னணி என்ன?

சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி மீது நம்பிக்கையில்லா தீர்மானம், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மீண்டும் மறைமுக வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் 28 உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்கினை பதிவு செய்ததனர். ந... மேலும் பார்க்க

TVK Vijay: ``தவெக விமர்சனம் செய்தாலும், பாஜக விஜயை கெஞ்சுவது ஏன்?'' - மாணிக்கம் தாகூர் கேள்வி

விருதுநகரில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 11 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு `காமராஜர் விருது... மேலும் பார்க்க

காமராஜர் பிறந்த நாள் விழா: விருதுநகரில் மலர்தூவி மரியாதை செலுத்திய மாணவிகள், ஆட்சியர், அமைச்சர்கள்

காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரில் அவரது 123 -வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சிகாலத்தில் அனைவருக்கும் கல்வி, மதிய உணவு திட்டம், நீர் மேலாண்மை, தொழிற்சா... மேலும் பார்க்க

``சாப்பாடு போடுறோம்; ஆனா, ஓட்டு போட மாட்டோம்'' -பாஜக தொண்டர் பேச்சால் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் பாஜக பூத் கமிட்டி அமைத்து வருகிறது. இந்நிலையில், விருதுநகரில் திடீரென பூத் கமிட்டி ஆய்வுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தருவதாக தகவல் வெளியானது.இந்நிலையில்... மேலும் பார்க்க