செய்திகள் :

ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது மாநிலங்களவை! எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் முடங்கியது!

post image

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜிநாமாவைத் தொடர்ந்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நேற்று(ஜூலை 22) காலை தொடங்கியது. மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கரும் அவைக்கு தலைமைத் தாங்கினார். மேலும், பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களுடன் வழக்கம்போல் சகஜமாகப் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றிரவு மருத்துவக் காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு தன்கர் கடிதம் எழுதினார். இந்தச் செய்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று காலை கூடியது. மாநிலங்களவைக்கு துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் தலைமைத் தாங்கினார்.

இந்த நிலையில், ஜகதீப் தன்கரின் ராஜிநாமாவுக்கான காரணத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் இரு அவைகளும் முடங்கின.

இதையடுத்து, பகல் 12 மணிவரை இரு அவைகளையும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.

மத்திய அரசுக்கும் ஜகதீப் தன்கருக்கும் முன்பை போல சுமுகமான உறவு இல்லை என்றும், அவர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தை மத்திய அமைச்சர்கள் புறக்கணித்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

The House was adjourned until 12 noon due to disruptions by opposition members following the resignation of Vice President Jagdeep Dhankhar.

இதையும் படிக்க : ஜகதீப் தன்கர் ராஜிநாமா ஏன்? எதிர்க்கட்சித் தலைவர்களின் சந்தேகமும் கருத்தும்!

கட்சிரோலி வளர்ச்சியைத் தடுக்க வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தும் நகர்ப்புற நக்சல்கள்: ஃபட்னவீஸ்

மகாராஷ்டிர மாநிலத்திற்கு வெளியே இருந்துவரும் நகர்ப்புற நக்சல்கள் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்பி வருவதாக மாநில முதல்வர் தேவேந்தி ஃபட்னவீஸ் கூறினார்.கட்சிரோலி மாவட்டத்தில் பல்வேறு தி... மேலும் பார்க்க

ரூ.12 ஆயிரத்திற்குள் அதிக பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்! ஓப்போ கே 13எக்ஸ்!

குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஓப்போ கே 13எக்ஸ் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் என ஓப்போ தெரிவித்துள்ளது.இதில், 6000mAh பேட்டரி திறன், 50... மேலும் பார்க்க

ஜீவனாம்சமாக ரூ.12 கோடி, பிஎம்டபிள்யு, மும்பை வீடு கேட்ட பெண்! பதில் கொடுத்த உச்ச நீதிமன்றம்

படித்த, திறமையான பெண்கள், தங்களது வாழ்வாதாரத்துக்காக, தாங்கள்தான் சம்பாதிக்க வேண்டும், ஜீவனாசம் என்ற பெயரில், கணவரிடமிருந்து இடைக்கால பராமரிப்புகளைக் கேட்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெர... மேலும் பார்க்க

ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவுக்கு ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளது: காங்கிரஸ்!

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவில் ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளதாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை திங்கள்கிழமை தி... மேலும் பார்க்க

காதலை மறுத்தப் பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்த இளைஞர்! தீரத்துடன் மீட்டவருக்கு குவியும் பாராட்டு!!

மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டிய நிலையில், தீரத்துடன் பெண்ணை மீட்டவருக்கு பாராட்டுகள் குவிகிறது.இளம... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் நாள் முழுவதும் முடக்கம்! மக்கள் பணம் வீணாவதாக மத்திய அமைச்சர் காட்டம்!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.இந்த நிலையில், மக்களின் பணத்தை எதிர்க்கட்சியினர் வீணடிப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிர... மேலும் பார்க்க