செய்திகள் :

கால்பந்து - கிரிக்கெட் சந்திப்பு: யுனைடெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

post image

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியுடனான இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சந்தித்தது உலகம் முழுவதும் நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

உலக அளவில் கால்பந்து விளையாட்டு பிரபலமாக இருந்தாலும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிதான் முதன்மையானதாக இருக்கிறது.

பல கிரிக்கெட் வீரர்கள் கால்பந்து ரசிகர்களாக இருப்பதால் இந்த நிகழ்வு ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

ஆண்டர்சன் டெண்டுல்கர் டிராபி போட்டியில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது.

இரு அணிகளுக்கு இடையேயான 4-ஆவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 23) தொடங்கவுள்ள நிலையில் இங்கிலாந்தில் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பில் இந்திய வீரர்கள் மான்செஸ்டர் யுனைடெட் சீருடைகளை அணிந்தும் யுனைடெட் வீரர்கள் இந்திய அணியின் சீருடைகளையும் அணிந்து கொண்டார்கள்.

குறிப்பாக சிராஜ் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவரது முன்மாதிரியான ரொனால்டோ அந்த அணியில் சில காலம் விளையாடியுள்ளார்.

முகமது சிராஜ் விக்கெட் எடுத்தால் ரொனால்டோ பாணியில் கொண்டாடுவது புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புகைப்படங்கள் இந்திய கால்பந்து, கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

The Indian cricket team's encounter with the Manchester United football team has left the world in awe.

ஹர்மன்ப்ரீத் சதம்: தொடரை வெல்ல இங்கிலாந்துக்கு 319 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 318 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக முதல்முறையாக டி20 தொடரை இந்திய மகளிரணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியி... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்!

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றையப் போட்டிய... மேலும் பார்க்க

4-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வார்: ஷுப்மன் கில்

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வார் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர்: நியூசி.க்கு 135 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா!

முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது.ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றை... மேலும் பார்க்க

கோலியைப் போலச் செய்வதை ஷுப்மன் கில் நிறுத்த வேண்டும்: மனோஜ் திவாரி

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஷுப்மன் கில் முன்னாள் டெஸ்ட் கேப்டன் விராட் கோலியைப் போல் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டுமென மனோஜ் திவாரி கடுமையாக விமர்சித்துள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி... மேலும் பார்க்க

மான்செஸ்டர் ஆடுகளத்தை பார்வையிட்ட இங்கிலாந்து பயிற்சியாளர், கேப்டன்!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறும் மான்செஸ்டர் ஆடுகளத்தை இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பார்வையிட்டனர்.இந்தியா மற்றும் இங்கிலாந்... மேலும் பார்க்க