செய்திகள் :

கட்சிரோலி வளர்ச்சியைத் தடுக்க வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தும் நகர்ப்புற நக்சல்கள்: ஃபட்னவீஸ்

post image

மகாராஷ்டிர மாநிலத்திற்கு வெளியே இருந்துவரும் நகர்ப்புற நக்சல்கள் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்பி வருவதாக மாநில முதல்வர் தேவேந்தி ஃபட்னவீஸ் கூறினார்.

கட்சிரோலி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டிய அவர் கோன்சரியில் உள்ள லாயிட்ஸ் மெட்டல்ஸ் அன்ட் எனர்ஜி லிமிடெட்டில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

கட்சிரோலியில் நக்சலிசம் குறைந்து வருகிறது. விரல்கள் விட்டு எண்ணக்கூடிய அளவில் மிகச் சில நக்சல்கள் மட்டுமே காடுகளில் எஞ்சியுள்ளனர். நக்சலைட்கள் வன்முறையைத் தவிர்த்து, பொதுவாழ்க்கையில் சேருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

துப்பாக்கி ஏந்திய நக்சலைட்டுகளின் எண்ணிக்கை குறைந்துவரும் அதேநேரத்தில் நகர்ப்புற நக்சலைட்கள் அதிகரித்து வருவதாக அவர் எச்சரித்தார். தவறான தகவல்களைப் பரப்பும் நகர்ப்புற நக்சலைட்டுகள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கட்சிரோலி முன்னேறத் தொடங்கி எஃகு ஆலைக்கான அடிக்கல் நாட்டப்பட்ட மறுநாளே, பழங்குடியினர் கொல்லப்படுவதாகவும், அவர்களின் நிலங்களில் எஃகு ஆலை கட்டப்படுவதாகவும், காடுகள் பெரியளவில் வெட்டப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பிரசாரமும் பதிவுகளும் தொடங்கப்பட்டன.

அரசு வளர்ச்சிக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென்று இதுபோன்ற பிரச்சாரம் தொடங்கியது ஆச்சரியமாக இருப்பதாகவும், பொய் பிரசாரத்தில் ஈடுபடுவோரைக் கண்டறியக் காவல் துறையையும் கட்சிரோலி ஐஜி சந்தீப் பாட்டீலையும் அரசு கேட்டுக் கொண்டது என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் இதுபோன்ற பதிவுகள் மூலம் அரசியலமைப்பிற்கு எதிராக மக்களைத் தூண்டுவதற்கு நகர்ப்புற நக்சல்கள் bவளிநாட்டு நிதியைப் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

நகர்ப்புற நக்சல்கள் போன்றே சிலர் வளர்ச்சியிலிருந்து மக்களை விலக்கி வைக்க வதந்திகளைப் பரப்புவதன் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்று அவர் கூறினார்.

Maharashtra Chief Minister Devendra Fadnavis on Tuesday said "urban Naxals" from outside the state were using foreign funds to spread rumours and keep the people of Gadchiroli away from the path of development.

பிகாரில் 52 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்! - தேர்தல் ஆணையம்

ராஞ்சி: பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.7 லட்சம் போலி வாக்காளர்கள் பதிவு செய்திருப்பது தேர்தல் ஆணையத்தின் வாக்க... மேலும் பார்க்க

கிராமப்புற வேலைவாய்ப்புக்காக மாநிலங்களுக்கு ரூ. 44,000 கோடி விடுவிப்பு: மத்திய அரசு

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ரூ. 44,323 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் பதிலதித்துள்ளது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 21 த... மேலும் பார்க்க

35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம்!

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணிக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வி சேவை ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2016 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளதாகவும் தெரிவித்... மேலும் பார்க்க

தரையிறங்கிய உடனே தீப்பற்றி எரிந்த ஏர் இந்தியா விமானம்: பயணிகள் பத்திரமாக மீட்பு!

புது தில்லி: தரையிறங்கிய உடனே ஏர் இந்தியா விமானம் தீப்பற்றி எரிந்ததால் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.ஏர் இந்தியாவின் ஏஐ 315 விமானம் ஹாங் காங்கிலிருந்து புறப்பட்டு தில்லியில்... மேலும் பார்க்க

ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும், சிறப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பு - முன்னாள் முதல்வர் கண்டனம்!

புவனேசுவரம் : ஒடிஸாவில் அண்மைக்காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாக நவீன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆளும் ஒடிஸாவில் காவல் நிலைய விவகாரங்களில் உள்ளூர் தலைவர்களின... மேலும் பார்க்க