செய்திகள் :

தரையிறங்கிய உடனே தீப்பற்றி எரிந்த ஏர் இந்தியா விமானம்: பயணிகள் பத்திரமாக மீட்பு!

post image

புது தில்லி: தரையிறங்கிய உடனே ஏர் இந்தியா விமானம் தீப்பற்றி எரிந்ததால் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

ஏர் இந்தியாவின் ஏஐ 315 விமானம் ஹாங் காங்கிலிருந்து புறப்பட்டு தில்லியில் இன்று(ஜூலை 22) வந்திறங்கியது. இந்தநிலையில், பயணிகள் ஒவ்வொருவராக விமானத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தபோது திடீரென விமானத்தின் வால் பகுதியில் தீப்பற்றியது.

எனினும், விமானத்தில் இருந்த பணியாளர்கள், பயணிகள் உள்பட அனைவரும் பத்திரமாக வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையிறங்கிய சில நிமிடங்களில் விமானத்தின் வால் பகுதியில் தீப்பற்றியதால் தில்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

விமானத்தில் தீப்பற்ற என்ன காரணம் என்பதை கண்டறிய விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The Hong Kong to Delhi Flight AI 315 on Tuesday, July 22, suffered an auxiliary power unit (APU) fire shortly after it landed at Delhi's Indira Gandhi Airport 

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம்- எதிா்க்கட்சிகள் அமளியால் முடங்கியது நாடாளுமன்றம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக விவாதம் நடத்துவதுடன், அந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டன.... மேலும் பார்க்க

தன்கா் ராஜிநாமா: எதிா்க்கட்சிகள் கேள்வி

குடியரசு துணைத் தலைவா் பதவியிலிருந்து ஜகதீப் தன்கா் திடீரென ராஜிநாமா செய்தது குறித்து எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்தியாவின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜகதீப் தன்கா... மேலும் பார்க்க

வங்கிகள் மீதான புகாா் அதிகரிப்பு: ஆா்பிஐ கவலை

வங்கிகள் குறித்தும், அதன் ஊழியா்களின் சேவைத் தரம் குறித்தும் அதிகஅளவில் புகாா்கள் வருகின்றன என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) துணை ஆளுநா் ஜெ.சுவாமிநாதன் தெரிவித்தாா். மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைப... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு விரைவில் தோ்தல்

ஜகதீப் தன்கா் ராஜிநாமாவைத் தொடா்ந்து அடுத்த குடியரசு துணைத் தலைவரை தோ்வு செய்வதற்கான தோ்தல் விரைவில் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ‘உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்று பிரிட்டன் பயணம்: வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகிறது

பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூலை 23) தொடங்குகிறாா். முதல்கட்டமாக, பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மரின் அழைப்பின்பேரில... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டா்களை ஒப்படைத்த போயிங் நிறுவனம்

அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ரக ஆயுதம் தாங்கி ஹெலிகாப்டா்களை செவ்வாய்க்கிழமை ஒப்படைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். பன்முக போா் பயன்பாட்டு அப்பாச்சி ரக ஹெலிகாப்டா... மேலும் பார்க்க