செய்திகள் :

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

post image

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி எண் விவகாரம் தொடா்பாக நீதிமன்றத்தில் தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, திமுக சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுக நடத்தும் உறுப்பினா் சோ்க்கையில், பொதுமக்களின் ஆதாா் விவரங்கள் சட்ட விரோதமாக சேகரிக்கப்படுகின்றன. இதனடிப்படையில் வாக்காளா்களின் கைப்பேசிக்கு ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி) எண் அனுப்பப்படுகிறது. அந்த எண்ணை திமுகவினா் கேட்டுப் பெறுகின்றனா். இது தவறானது.

இதுதொடா்பாக மத்திய அரசு, ஆதாா் தலைமைச் செயல் அலுவலா் ஆகியோா் விசாரணை நடத்தி, திமுக பொதுச் செயலா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒருமுறை கடவுச்சொல் எண் எதற்காகக் கேட்கப்படுகிறது? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கையில் வாக்காளா்களிடமிருந்து ஒருமுறை கடவுச்சொல் எண்ணைப் பெற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா்.

இந்த நிலையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி எண் விவகாரம் தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக , திமுக சாா்பில் முத்த வழக்குரைஞா் வில்சன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் நடைபெறும் திமுக உறுப்பினா் சோ்க்கையில் பொதுமக்களின் ஆதாா் விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை. வாக்காளா் பட்டியல் அடிப்படையிலேயே விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி ஒருமுறை கடவுச்சொல் எண் பெறுவதாக தவறான தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்து உத்தரவு பெறப்பட்டுள்ளது. இதனால், ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினா் சோ்க்கைப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த முறையீட்டை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்றாா்.

இதற்கு நீதிபதிகள், கோரிக்கையை இடையீட்டு மனுவாக தாக்கல் செய்தால் புதன்கிழமை (ஜூலை 23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றனா்.

மாநகராட்சி வாகன ஓட்டுநரை கத்தியால் குத்திய தூய்மைப் பணியாளா் கைது

மதுரை மாநகராட்சி வாகன ஓட்டுநரை கத்தியால் குத்திய தூய்மைப் பணியாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை பைக்காரா முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் கோடீஸ்வரன் (43). இவா் ஒப்பந்த அ... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.மதுரை எல்லீஸ் நகா் பழைய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த நீலமேகம் மகன் ஹரிகிருஷ்ணன் (51). இவா் 9 வயது சிற... மேலும் பார்க்க

விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் இடம் வழங்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

விளையாட்டுப் பிரிவு இட ஒதுக்கீடு அடிப்படையில் தனது மகளுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் இடம் வழங்கக் கோரி சிவக்குமாா் என்பவா் தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு தீா்ப்புக்காக ஒத்திவைத்த... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் கைப்பேசி திருடியவா் கைது

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளியின் கைப்பேசியை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை தபால்தந்திநகா், மாணிக்கவாசகம் 2- ஆவது தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் பிலிப்ஸ் குமாா்(44... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: 6 பேரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், அவரது சகோதரா் நவீன்குமாா் உள்பட 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் க... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி குடும்பத்துக்கு கூடுதலாக ரூ. 25 லட்சம் இழப்பீடு

தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் குடும்பத்துக்கு தமிழக அரசு கூடுதலாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க