செய்திகள் :

சாத்தான்குளம் வழக்கில் ட்விஸ்ட்: ’நடந்தத நான் சொல்றேன்’ – அப்ரூவராக மாறும் மாஜி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்

post image

சாத்தான்குளத்தில் காவல்துறை சித்திரவதையால் தந்தை-மகன் மரணமடைந்த வழக்கில் அப்ரூவராக மாற உள்ளதாக சிறையில உள்ள முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதான சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு போலீஸாரின் தாக்குதலினால் தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 22, 23 தேதிகளில் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர்.

நாட்டையே அதிரவைத்த இந்த கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.ஐ பால்துரை உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவைத் தொடர்ந்து, சி.பி.ஐ-யால் விசாரணை நடத்தப்பட்டு வரும் இவ்வழக்கு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவர்களில், எஸ்.எஸ்.ஐ பால்துரை உடல்நலக்குறைவால் கடந்த 2020 ஆகஸ்டில் உயிரிழந்தார். மீதி 9 பேர் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர்.

இவர்கள் பலமுறை ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்தும் உயர் நீதிமன்ற மனுக்களை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், 'தான் அப்ரூவராக மாற விரும்புவதாக' முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், "நான் அப்ரூவராக மாறி அரசு சாட்சியாக அனைத்து காவலரும் செய்த குற்றங்களை சொல்ல விரும்புகிறேன். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தை மகன் குடும்பத்திற்கு நீதி கிடைக்க விரும்புகிறேன்" எனக் கூறி உள்ளார்

ஜெயராஜ் - பென்னிக்ஸ்

இதுகுறித்து பதில் அளிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிட்ட மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி, மனு மீதான விசாரணையை ஜூலை 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

வேலூர்: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; கணவன் வெட்டிக்கொலை; இளைஞனுடன் சிக்கிய மனைவி - நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகிலுள்ள குப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவரின் மகன் பாரத் (36). கேட்டரிங் படித்துள்ள பாரத் தாம்பரம் பகுதியிலிருக்கும் ஒரு தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்ட... மேலும் பார்க்க

சைபர் கிரைமில் ரூ.2 கோடி பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர்; கோவா, காஷ்மீரில் காதலியுடன் உல்லாச பயணம்..

நாடு முழுவதும் சைபர் கிரிமினல்கள் பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துவிடுவோம் என்று கூறி மிரட்டி அடிக்கடி பணத்தை பறித்து வருகின்றனர். இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் இக்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `என் அக்கா குளிக்கறதை எட்டிப் பாக்குறியா ?’ - இளைஞரை கொலை செய்த பெண்ணின் சகோதரர்

புதுச்சேரி, பாகூர் அடுத்த பனையடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுரு. சில நாள்களுக்கு முன் தன்னுடைய எதிர்வீட்டில் இருக்கும் பெண் குளிக்கும்போது, மாடியில் இருந்து இவர் எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது.... மேலும் பார்க்க

`உன்னைக் கொன்று பொட்டலமாக அனுப்பி வைப்போம்’ - மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட மனைவி; எஸ்.ஐ மகன் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மேல்நெல்லி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் நர்கீஸ். பி.எஸ்.சி பட்டதாரியான நர்கீஸிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவுக்குஉட்பட்ட சோழவரம் கி... மேலும் பார்க்க

``அதிக சொத்து யாருக்கு?'' - தந்தையின் இறுதிச்சடங்கை நடத்தவிடாமல் 4 சகோதரர்கள் அடிதடி..

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள சரஸ்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜலுபாய் (78) நேற்று முன் தினம் இறந்து போனார். அவருக்கு மொத்தம் 7 பிள்ளைகள். அதில் 2 பேர் இறந்துவிட்ட நிலையில் 4 மகன்களும், ஒரு ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பிரிந்து சென்ற மனைவி மீது சந்தேகம்; கூலிப்படை வைத்து கொன்ற கணவன்; சாயல்குடியில் கொடூரம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெர்மின் (34). இவருக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரரான விஜய கோபால் என்பவருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு ... மேலும் பார்க்க