செய்திகள் :

பெண் கடத்தல் வழக்கில் கைதான பாஜக எம்பி மகன்.. அரசு உதவி தலைமை வழக்கறிஞராக நியமனம்!

post image

ஹரியாணாவில் இளம்பெண்ணை கடத்த முயன்ற வழக்கில் கைதான பாஜக முன்னாள் தலைவரின் மகன், அரசு உதவி தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சண்டீகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் மகள் வர்னிகா குண்டு சென்றுகொண்டிருந்த காரை பின்தொடர்ந்து, வழிமறித்து கடத்த முயன்றதாக விகாஸ் பராலா கைது செய்யப்பட்டார்.

ஹரியாணா மாநில பாஜக முன்னாள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினர் சுபாஷ் பராலாவின் மகனான விகாஸ் மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் குமார் என்பவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதலில் பெண்ணைப் பின்தொடர்தல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினருக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து கடத்தல் முயற்சி பிரிவு சேர்க்கப்பட்டது.

சண்டீகர் நீதிமன்றத்தில் விகாஸ் மற்றும் ஆஷிஷுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 8 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகின்றன.

5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், சட்டப்படிப்புக்கான தேர்வை விகாஸ் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 18 ஆம் தேதி ஹரியாணா அரசின் உதவி தலைமை வழக்கறிஞர் பதவிக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்தது.

இந்த பதவிக்கு 100 -க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், விகாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பெண் கடத்தல் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர் அரசின் உயரிய பதவியில் நியமனம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

The son of a BJP leader arrested in the case of attempting to kidnap a young woman in Haryana has been appointed as the Assistant Public Prosecutor General.

இதையும் படிக்க : 25வது முறை டிரம்ப் பேச்சு! 5 ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டன! வெள்ளி விழா என காங்கிரஸ் விமர்சனம்

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.ஏர் இந்தியா விமான விபத்தில் பலிய... மேலும் பார்க்க

ஆலப்புழாவில் அச்சுதானந்தன் உடல்! 150 கி.மீ. கடக்க 22 மணிநேரம்!

திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தல... மேலும் பார்க்க

விமான விபத்து: பிரிட்டன் வந்த இரு உடல்கள் மாறிவிட்டன! உறவினர்கள் புகார்!

ஏர் இந்தியா விபத்தில் பலியான பிரிட்டனைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினர் தங்களுக்கு கிடைத்த உடலுடன் டிஎன்ஏ பரிசோதனை பொருந்தவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்... மேலும் பார்க்க

தனிக் கவனம் பெறும் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர்! காரணம்?

உடல்பயிற்சிக் கூடங்களில் மழைக்குக் கூட ஒதுங்காமல், கிட்டத்தட்ட 26 கிலோ எடையைக் குறைத்து, பார்ப்பவர்களின் கண்களை விரியச் செய்கிறார் ஸ்ரீதேவியின் கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூர்.திரைத்துரை... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியினர் தொடர் அமளி! நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கிய... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்! பணிகளைத் தொடங்கியது தேர்தல் ஆணையம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மருத்துவக் காரணங்களுக்காக அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) -ன... மேலும் பார்க்க