செய்திகள் :

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்! பணிகளைத் தொடங்கியது தேர்தல் ஆணையம்!

post image

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மருத்துவக் காரணங்களுக்காக அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) -ன் படி, தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு திங்கள்கிழமை இரவு கடிதம் அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, ஜகதீப் தன்கரின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குடியரசு தலைவர் அனுப்பியதாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

தேர்தல் பணிகள் தொடக்கம்

இந்த நிலையில், புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

”அரசியலமைப்பு பிரிவு 324 இன் கீழ், இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது.

அதன்படி, குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் தொடர்பான தயாரிப்புப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்தவுடன் தேர்தலுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.

தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் தயாரித்தல், தேர்தல் அதிகாரி மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகளை இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் 2027 வரை இருக்கும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ராஜிநாமா செய்துள்ளார். இந்த நிலையில், புதிதாக தேர்வு செய்யப்படவுள்ள குடியரசு துணைத் தலைவர், முழு பதவிக் காலமான 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.

அடுத்த சில நாள்களில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு, அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The Election Commission of India announced on Wednesday that it has begun preparations for the Vice Presidential election.

இதையும் படிக்க : பிரிட்டன் புறப்பட்டார் பிரதமர் மோடி!

தில்லியில்... ஷேக் ஹசீனா கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து!

தில்லியில், வங்கதேசத்தின் முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக் தலைவர்கள் திட்டமிட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் இரும்புப் பாலம் உடைந்து விபத்து!

மேற்கு வங்கத்தில் தண்ணீர் குழாய் செல்லும் இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. தாமோதர் நதியின் மீது பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள் மூலம் நகர்புறங்களுக்கான குடிநீர் அனுப்பப்படும் ந... மேலும் பார்க்க

மிசோரமின் அதிக வயதான பெண் மரணம்!

மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில், அம்மாநிலத்தின் அதிக வயதுடைய பெண் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. லாங்ட்லாய் மாவட்டத்தின், பங்குவா கிராமத்தில் வசித்த வந்தவர் ஃபாமியாங் (வயது 117). இவர், கடந்த 1908-... மேலும் பார்க்க

ஜூலை 29 -ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்! மோடி பங்கேற்பு

நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 ஆம் தேதி விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, 16 மணிநேரம் நடைபெறும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க... மேலும் பார்க்க

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.ஏர் இந்தியா விமான விபத்தில் பலிய... மேலும் பார்க்க

ஆலப்புழாவில் அச்சுதானந்தன் உடல்! 150 கி.மீ. கடக்க 22 மணிநேரம்!

திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தல... மேலும் பார்க்க