செய்திகள் :

மிசோரமின் அதிக வயதான பெண் மரணம்!

post image

மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில், அம்மாநிலத்தின் அதிக வயதுடைய பெண் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லாங்ட்லாய் மாவட்டத்தின், பங்குவா கிராமத்தில் வசித்த வந்தவர் ஃபாமியாங் (வயது 117). இவர், கடந்த 1908-ம் ஆண்டு பிறந்ததாக அவரது கிராமத்தின் அதிகாரிகள் பராமரித்து வரும் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மிசோரமின் அதிக வயதுடைய பெண் எனக் கருதப்பட்ட ஃபாமியாங், கடந்த சில மாதங்களாக வயது முதிர்வினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில்,அவர் நேற்று (ஜூலை 22) அவருடைய வீட்டில் ஃபாமியாங் மரணமடைந்ததாக, கிராம அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது இறுதிச் சடங்குகள் இன்று (ஜூலை 23) நடைபெற்ற நிலையில், பங்குவாவிலுள்ள மயானத்தில் ஃபாமியாங்கின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஃபாமியாங் ஹெயினாவா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு 8 குழந்தைகள் பிறந்துள்ளன. மேலும், அவருக்கு 51 பேரப் பிள்ளைகள், 122 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் மற்றும் 22 எள்ளுப் பேரப் பிள்ளைகளும் உள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், கடந்த 2023-ம் ஆண்டு மிசோரமில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், வயது முதிர்விலும் வாக்களித்தற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஃபாமியாங்கை கௌரவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 234 ஆக உயர்வு!

The oldest woman in the state has reportedly passed away in Mizoram's Langtlai district.

சத்தீஸ்கா்: காட்டு யானைகள் தாக்கி குழந்தை உள்பட மூவா் உயிரிழப்பு

சத்தீஸ்கரின் ராய்கா் மாவட்டத்தில் காட்டு யானைகள் தாக்கியதில் மூன்று வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா். இது தொடா்பாக மாநில வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ராய்கா் மாவட்டத்தில் வனப் பகுதியையொட்டிய... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்கம்: அமித் ஷா உயா்நிலை ஆலோசனை

வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு எதிராகப் பதவிநீக்க நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதையொட்டி, மக்களவைத் தலைவா் ஓம்... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் அமளி: மக்களவை 3-ஆவது நாளாக முடக்கம்- மாநிலங்களவையும் ஒத்திவைப்பு

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் புதன்கிழமையும் அமளியில் ஈடுபட்டன. எதிா்க்கட்சிகளின் இடையூறுகளால், மக்களவை தொடா்ந்து மூன... மேலும் பார்க்க

பிகாா் கிராமத் தலைவா் கொலை வழக்கில் தொடா்புடையவா் தில்லி கேசவ் புரத்தில் கைது

பிகாா் முன்னாள் கிராமத் தலைவா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 39 வயது நபா் வடக்கு தில்லியின் கேசவ் புரத்தில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். கைதுசெய்யப்பட்ட ராகுல் சிங் மீது 31 க... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் நடைமுறைகள் தொடக்கம்

உடல்நிலையைக் காரணம் காட்டி குடியரசு துணைத் தலைவா் பதவியை ஜகதீப் தன்கா் திடீரென திங்கள்கிழமை ராஜிநாமா செய்த நிலையில், அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டு... மேலும் பார்க்க

‘பிகாரில் 1 லட்சம் வாக்காளா்களை கண்டுபிடிக்க முடியவில்லை’

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ‘ஒரு லட்சம் வாக்காளா்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியயவில்லை’ என்று தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது. இதுகுறித்... மேலும் பார்க்க