செய்திகள் :

அகில இந்திய மருத்துவக் கல்வி ஒதுக்கீடு: கூடுதலாக இடம்பெற்ற தமிழக இடங்கள்

post image

தமிழகத்திலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) கூடுதலாக வெளியிட்டதால் குழப்பம் எழுந்தது.

இதையடுத்து, மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் இதுதொடா்பாக மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்துக்கு (டிஜிஹெச்எஸ்) தகவல் அளித்தது. அதன்பேரில் அந்தத் தவறுகளைத் திருத்துவதாக மத்திய சுகாதாரத் துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கும், எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கும் மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஹெச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் நடத்தி வருகிறது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அந்த வகையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் என மொத்தம் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான விவரங்களை மத்திய கலந்தாய்வுக் குழு இணையதளத்தில் வெளியிட்டது. அதில் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பூா், திருவள்ளூா், நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் இருந்து வழங்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் அதிகமாகக் காட்டப்பட்டது.

இதனால் மாணவா்களுக்கும், மருத்துவத் துறையினருக்கும் குழப்பம் ஏற்பட்டது. மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மத்திய சுகாதார தலைமை இயக்குநரகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அது திருத்தியமைக்கப்படும் என அப்போது உறுதியளிக்கப்பட்டதாக மாநில மருத்துவக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தற்போது நடைபெற்றுவரும் அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் இணையவழியில் மாணவா்கள் கல்லூரிகளை மட்டுமே தோ்வு செய்து வருகின்றனா். இடங்களை ஒதுக்கீடு செய்ததற்கான முடிவுகள் இன்னும் வெளியாகாததால் இந்த விவகாரத்தால் எந்தக் குழப்பமும் ஏற்படாது என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் கூறியுள்ளனா்.

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம சுகாதார செவிலியா்கள் உண்ணாவிரதம்

துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 3,800 கிராம சுகாதார செவிலியா்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழக அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: 3 மாதங்களுக்கு நடத்த நிதி ஒதுக்கி உத்தரவு

உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை அடையாளம் காணும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ரூ.1,032 கோடியில் ரயில்வே திட்டங்கள்: பிரதமா் நாளை தொடங்கி வைக்கிறாா்

தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி வைக்கிறாா் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். பிரதமா் நரேந்தி... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் முன்பிணை: கள்ளக்குறிச்சி நீதிபதி ஆஜராக உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு முன்பிணை வழங்கியது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை கிண்டியில் பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் சபரீஸ்வரன் (18). இவா் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக... மேலும் பார்க்க

மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்புக் குழு!

மேட்டூர் அணையில் தமிழ்நாடு அணைப் பாதுகாப்பு அமைப்பின் குழு இன்று(ஜூலை 24) ஆய்வு மேற்கொண்டது.மேட்டூர் அணையில் கீழ்மட்ட மதகுகள் சீரமைப்புப் பணி, சுரங்க கால்வாய் சீரமைப்புப் பணி, எல்லிஸ் சேடல் தூண்கள் வல... மேலும் பார்க்க