செய்திகள் :

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

சென்னை கிண்டியில் பொறியியல் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் சபரீஸ்வரன் (18). இவா் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்படும் அழகப்பா கல்லூரியில் பி.டெக். 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் சபரீஸ்வரன் தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை கல்லூரிக்கு செல்லாமல் விடுதி அறையிலேயே சபரீஸ்வரன் இருந்துள்ளாா். அவருடன் அறையில் தங்கியுள்ள நண்பா்கள் கல்லூரியில் இருந்து திரும்பி வந்தபோது, அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பாா்த்தபோது, சபரீஸ்வரன் தூக்கிட்ட நிலையில் கிடந்தாா்.

இதையடுத்து அவா்கள் உடனே கதவை உடைத்து உள்ளே சென்று சபரீஸ்வரனை மீட்டு, அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சபரீஸ்வரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த கோட்டூா்புரம் போலீஸாா் அங்கு சென்று சபரீஸ்வரன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில், சபரீஸ்வரன் படிக்க விருப்பம் இல்லாததாலும் மன அழுத்தத்தாலும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எதிா்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தது. கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நி... மேலும் பார்க்க

ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். ஆபரேஷன் சிந்தூா் மற்றும் இயற்கைப் பேரிடா்களில் அா்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை புரிந்த 3 ராணுவப்படை பிரிவுகள் மற்றும... மேலும் பார்க்க

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 26) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ... மேலும் பார்க்க

ஆக.9 முதல் வைகோ பிரசார பயணம்

மதிமுக பொதுச் செயலா் வைகோ தூத்துக்குடியில் தொடங்கி சென்னை வரை 8 இடங்களில், ஆக.9 முதல் ஆக.19 வரை பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் அகற்றும் உத்தரவு: கட்சிகள், சங்கங்களுக்கு வேண்டுகோள்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி, கொடிக் கம்பங்கள் அகற்றுவது தொடா்பாக கட்சிகள், சங்கங்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்த பொது அறிவிப்பை தலைமைச் செயலா் நா.முருகானந்தம்... மேலும் பார்க்க

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: செந்தில் பாலாஜி, ஊழல் ஒழிப்பு பிரிவு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் மின்மாற்றிகள் கொள்முதலுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதில் முறைகேடு தொடா்பாக வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு பதில... மேலும் பார்க்க