செய்திகள் :

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: செந்தில் பாலாஜி, ஊழல் ஒழிப்பு பிரிவு பதிலளிக்க உத்தரவு

post image

தமிழகத்தில் மின்மாற்றிகள் கொள்முதலுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதில் முறைகேடு தொடா்பாக வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக வழக்குரைஞா் அணி துணைச் செயலா் இ.சரவணன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2001 முதல் 2003-ஆம் ஆண்டு வரை 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு தொடா்பு உள்ளது. இதுதொடா்பாக, கடந்த மே மாதம் ஊழல் ஒழிப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தேன். அந்தப் புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த முறைகேடு தொடா்பாக அறப்போா் இயக்கம் சாா்பில் ஏற்கெனவே புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

அரசு உயா் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிக்கு எதிராக இந்த முறைகேடு புகாா் இருப்பதால், ஊழல் ஒழிப்பு பிரிவினா் அவா்களை பாதுகாக்கும் வகையில் செயல்படுகின்றனா். எனவே, இந்த புகாரின் பேரில் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். அல்லது, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், இதே கோரிக்கையுடன் அறப்போா் இயக்கம் தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது என்றாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடா்பாக செந்தில் பாலாஜி, ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டாா். அறப்போா் இயக்கம் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள வழக்குடன், இந்த வழக்கையும் சோ்த்து விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும், என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

பருவ காலங்களை கணிக்கும் செயற்கைக்கோள்: ஜூலை 30ல் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர்

மழைக்காலம் மற்றும் பருவ காலங்களில் மேகமூட்டங்கள் எவ்வளவு இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை தெளிவாக புகைப்படம் எடுக்க உதவும் புதிய செயற்கைக்கோள், ஜூலை 30 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ... மேலும் பார்க்க

பொதுப்பணித் துறை சாதனைகள்: தமிழக அரசு விளக்கம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் பொதுப்பணித் துறையின் சாதனைகளாக கட்டடக்கலை மாட்சியைப் புலப்படுத்தும் எழில்மிகு கட்டடங்கள் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள... மேலும் பார்க்க

பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் மனு! தங்கம் தென்னரசு அளிப்பார்!

தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும்... மேலும் பார்க்க

திருச்சியில் பிரதமர் மோடியை வரவேற்கும் இபிஎஸ்!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று(ஜூலை 26) இரவு 10.45-க்கு வரவேற்கவுள்ளார்.தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக இன்று வருகை தரும் பிரதமர் நர... மேலும் பார்க்க

கோவையில் ஒரு அபிராமி! நான்கரை வயது குழந்தையைக் கொன்ற தாய்

கோவையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த நான்கரை வயது ஆண் குழந்தையைக் கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம்... மேலும் பார்க்க

மது போதையில் நண்பர்களிடையே மோதல்: எழும்பூரில் படுகாயமடைந்த எஸ்ஐ உயிரிழப்பு!

சென்னை எழும்பூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளா் (எஸ்ஐ) படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க