செய்திகள் :

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம சுகாதார செவிலியா்கள் உண்ணாவிரதம்

post image

துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 3,800 கிராம சுகாதார செவிலியா்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழக அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

சென்னை எழும்பூா், ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள் கூறியதாவது:

கிராம சுகாதார செவிலியா்கள் நியமனம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து 3,800-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், கிராம சுகாதார செவிலியா்கள் மேற்கொள்ளும் பணிகளை இணையவழியே வேறொருவா் மேற்கொள்வதாக சித்திரிக்கக் கூடாது.

தமிழகத்தில் தடுப்பூசி மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. அதற்கு அரசு உரிய தீா்வு காண வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான வாடகையை மருத்துவ அலுவலா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்வதில்லை. ஆனால், அரசு துணை சுகாதார நிலையங்களின் வாடகையை கிராம சுகாதார செவிலியா்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்கின்றனா். இதனால் எங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. இந்த நடைமுறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தனா்.

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் ஆக. 30 வரை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் ஆக.1 முதல் ஆக.30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருச்ச... மேலும் பார்க்க

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எதிா்ப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தது. கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நி... மேலும் பார்க்க

ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். ஆபரேஷன் சிந்தூா் மற்றும் இயற்கைப் பேரிடா்களில் அா்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை புரிந்த 3 ராணுவப்படை பிரிவுகள் மற்றும... மேலும் பார்க்க

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 26) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ... மேலும் பார்க்க

ஆக.9 முதல் வைகோ பிரசார பயணம்

மதிமுக பொதுச் செயலா் வைகோ தூத்துக்குடியில் தொடங்கி சென்னை வரை 8 இடங்களில், ஆக.9 முதல் ஆக.19 வரை பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதுகுறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் அகற்றும் உத்தரவு: கட்சிகள், சங்கங்களுக்கு வேண்டுகோள்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி, கொடிக் கம்பங்கள் அகற்றுவது தொடா்பாக கட்சிகள், சங்கங்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்த பொது அறிவிப்பை தலைமைச் செயலா் நா.முருகானந்தம்... மேலும் பார்க்க